Tuesday, February 1, 2022

ஒப்பற்றமஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு - பாகம் - 6 (Oppatra Mahaapurushar Srirangamahaa Guru - Part - 6)

தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


தமிழாக்கம்:  ஶ்ரீமதி வனஜா


யோகத்தை பற்றிய சில அனுபவங்களை ஒருவர் தனக்குள் அனுபவித்து விடலாம். அதுபற்றி சாஸ்திரங்களை கொண்டு உதாரணமும் காட்டி விடலாம். ஆனால் பிறரும் அடையும்படி அதை பயன்படுத்துவது கடினமானது. ஶ்ரீரங்க மஹாகுருவோ அத்திறமையை முழுதும் பெற்று முதன் முதலில் தன் மனைவியிடம் அதை பயன்படுத்தினார். அவரும் மிகவும் குறுகிய காலத்திலேயே அத்புதமான யோக அனுபவங்களை அடைந்தார். மற்றவரும் இன்றும் கூட அதன் பயனை அடைய முடியும் என்ற நிர்ணயம் கொண்டு தன் பிற்காலத்தில் நூற்றுக்கணக்கானோர்க்கு ஞானதானம் வழங்கிய மஹா புருஷர் ஶ்ரீரங்க மஹாகுரு ஆவார்.


 ஶ்ரீரங்கமஹாகுரு  தான்  பூரண ஸமாதி நிலையை அடைந்திருந்தாலும் பிறருக்கு தீக்ஷை அளிப்பதை தன் உள்ளுணர்வின் உந்துதலை வைத்துதான் செய்தருளினார். யோகத்திற்கு முதலும் முடிவுமான இலக்காகி எது பிரபஞ்சத்தை வழி நடத்துகிறதோ அந்த உன்னதமான சக்தியுடன் இரண்டற கலந்து அதன் உந்துதலால் தீக்ஷை அளித்தார். தியானயோகத்தின் உச்ச நிலையை அடைந்து இணையில்லாத ஜோதியில் கலந்து ஆத்ம  ஒளியும் கருணையும் அமிர்தமும் அவர் கண்களின் வழி சொரிய தீக்ஷை அளித்து வந்தார். உந்துதல் (பகவத்ஸங்கல்பம்) இல்லாவிடில் எவ்வளவுதான் பாசமும் உறவும் இருந்தாலும்  எவருக்கும் தீக்ஷை அருள முயற்சிக்கவில்லை. அக்கருணைக்கு  ஆளானவர்களில்  ஆண், பெண், வயதானவர், சிறியவர், சில நேரங்களில் சிறு குழந்தைகளும் கூட இருந்தனர். இயன்றவர், இயலாதவர், ஆரோக்கியமானவர், ஆரோக்கியமற்றவர் அனைவரும் உண்டு. அவர்களின் தகுதியையோ மற்றவைகளை பற்றியோ கவலைகொள்ளவில்லை. மாறாக அவர்களின் ஜீவத்தின் நிலையை மட்டுமே கண்டறிந்து ஞானம் அடைய வேண்டும் என விரும்பி தீக்ஷை அளித்தார். அவர்களுக்கு யோகமார்கத்திற்கான பாதையை திறந்தருளினார். அவர்களுக்குள் அடைபட்டிருந்த ஆத்ம மார்க்கத்தை திறந்து வைத்தார். பிறப்பு இறப்பற்ற  நிலைக்கு செல்லும் பாதைக்கு வழி காட்டினார்.

(தொடரும்)