Wednesday, April 10, 2019

ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahapurusar Srirangamahaguru Part-1)

திரு எஸ்.வி.சாமு அவர்களின்  மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி

                                                                       Part 1

( தமிழாக்கம்:  ஶ்ரீமதி ஜானகி)


நமது ஸனாதன பரம்பரை அநேக ஸாதுக்களையும், யோகிகளையும் கண்டுள்ளது. ஶ்ரீரங்க மஹாகுரு என்ற மஹான் நமது பாரதம் கண்டஅத்தகைய மஹான்களில்  அபூர்வமும், ஒப்பற்றவருமான ஒரு யோகி. மேருவைப்போல உயர்ந்த அசாதாரணமான குணநலன்களைகொண்டவராக விளங்கியவர். அவர் அந்த பெயரே கூறுவது போல ஓர் ஞான புருஷனாக திகழ்ந்தார்.

ஶ்ரீரங்கமஹாகுருவானவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து எளிமையான உலகவாழ்க்கை நடத்தினார். அவரது யோகமஹிமையானதுஇலை மறைவிலுள்ள காய்போல் உலகத்தின்  கண்களுக்கு புலப்படாது திகழ்ந்தது. அசாதாரணமான அத்யாத்ம ஸித்தியை தான் அடைந்ததுமட்டுமன்றி அதை விரும்பி தன்னை நாடி வந்தவர்க்கும் அதை அருளிய ஒப்பில்லாத மஹாபுருஷர்.
உலகில் ஞானிகள் தோன்றினாலும் அவர்களுடனேயே அந்த ஞானமும் மறைந்து விடுவதை நாம் காண்கிறோம். ஆனால் ஶ்ரீரங்கமஹாகுரு  அருளிய ஞானம், வித்யை, கலை முதலியவை அவருடன் மறையவில்லை. தான் கண்ட பரம்பொருளை பிறரும் கண்டுஅனுபவிக்கும்படி செய்யும் சாமர்த்யமுள்ளவராக விளங்கினார். நம் சம காலத்தில் பெங்களூரில் வாழ்ந்து சமூகத்தில் அனைவரையும்ஊக்குவித்த  ஶ்ரீ ஶ்ரீரங்கப்ரியஸ்வாமிகளின் குருவும் இவரே. அவர்போன்ற அநேக மஹனீயர்களுக்கு பரிசோதித்து அறியக்கூடிய பாரதகலாச்சாரத்தின் உண்மையும், முழுமையுமான அறிமுகத்தை அளித்தார் ஶ்ரீரங்கமஹாகுரு.
அனைத்து  வித்யைகளும், கலைகளும் எவ்வாறு இறைவனிடமிருந்து மலர்ந்தன மற்றும் அவைகளை அறிந்து உணர்ந்து உபாசித்தால்அவை ஸாதகனை அந்த இறை ஒளியிடமே  அழைத்து செல்லும் என்பதை நிரூபித்த பெருமை இவருடையது.

அவருடைய இத்தகைய கண்ணோட்டத்தை கண்டு கொண்டது அவருடைய  சிஷ்ய சமூகம் ஆனாலும் அவருடைய இந்த விசாலமானகண்ணோட்டம் பாரத தேசம் மட்டுமே அல்லாது உலகிற்கே பரம மங்களமான ஒரு வழிகாட்டியாக உதவுகிறது.                                                                                             
அவதாரம்
ஶ்ரீரங்க ஸத்குரு என்ற மஹா புருஷர் 1913ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை மஹாபரணி நட்சத்திரத்தில்  கர்நாடகமாநிலம், நஞ்ஜனகூடு தாலூகாவில் ஹெடதலை (Hedathale) என்னும் கிராமத்தில் ஒரு ஶ்ரீ வைஷ்ணவ குடும்பத்தில் தோன்றினார்.  இவருடையதிருநாமம் ஶ்ரீநிவாஸரங்காசார்யர். ‘ரங்கஸாமி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் ஶ்ரீ நல்லான் சக்ரவர்த்திதிருமலாச்சார்யார். இவர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர். தாயார் ஶ்ரீமதி ருக்மணி அம்மையார். மிகவும் கருணையுள்ளம் படைத்தவர்.தன் தந்தையிடம் கற்று அறிந்த இயற்கை மருத்துவ முறையில் பல பேருக்கு வைத்தியம் செய்து உதவியவர்.

ஶ்ரீராமானுஜ ஸம்ப்ரதாயப்படி பக்தர்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காராதிகளை செய்வித்து வந்த இந்த வம்சத்தவர்கள் ‘நல்லான் சக்ரவர்த்திகுருபீடம்’ எனும் பெருமை அடைந்திருந்தனர். ஆர்ய பாரத மஹரிஷிகளின் ஹ்ருதய குகையில் தோன்றிய ஞானமனைத்தையும் தன்னுள்கொண்டு  தன் மூதாதையர்கள் அடைந்த குரு சப்தம் உண்மையாகும்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆத்மஒளியை காண்பதற்கு வழிகாட்டினார் ஶ்ரீரங்க மஹாகுரு.