Showing posts with label 31_ayvmarticle. Show all posts
Showing posts with label 31_ayvmarticle. Show all posts

Thursday, February 17, 2022

உடலும் ஆலயமும் - 2 (Udalum Alayamum - 2)

  • மூலம்: கஜானன பட்டா
  • தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீதர்
  • மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


ஆலயம்  - மனித உடலின் நகல் 

இந்த மனித இயந்திரத்தை  கவனித்த  யோகிகள், இதனுள் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா மற்றும் ஸஹஸ்ராரம் என்னும் ஏழு மையங்களை தரிசித்தனர். இந்த  ஏழு  மையங்கள்  ஏழு வாயில்களாக  விளங்கி, உள் ஒளிரும்  இறைவனுடைய தரிசனத்திற்கு வழி செய்து கொடுக்கின்றன. இந்த ஏழு மையங்களில் மூன்று மையங்கள் மிகவும்  முக்கியமானவைகளாகும். இவற்றில்  ஒன்று  முதன்மையானதாகும். 

இவ்வாறான உள் அமைப்பை அடையாளமாக கொண்டு, ஆலயங்களிலும் முறையே ஏழு  வாயில்கள், மூன்று வாயில்கள், ஒரு வாயில் என்னும்  முறையிலான  அமைப்பை ஏற்படுதினர்.

முதுகெலும்பின் அடையாளமாக ஒரு த்வஜஸ்தம்பம், இறைவனின் எதிரில் ஒருவருக்கு உண்டாகும் மேல்முகநோக்கின்  அடையாளமாக ஒன்று-மூன்று-ஐந்து மற்றும் ஏழு கலசங்களின்  அமைப்பு, ஆலயத்தின் சுற்றிலும் முறையே பௌதிகம், தைவிகம், ஆத்யாத்மிகங்களாகிய சிற்பங்கள், அந்தரங்கத்தில்   நடைபெறும்  ஸத்பக்திகளின்  மோதல் மற்றும்  ஸத்சக்திகளின் வெற்றியைக்குறிக்கும்  கதைகளின் கல்வெட்டுக்கள், அறுபத்திநான்கு ஆயகலைகளின் வெவ்வேறு  சுவடுகள் - இவை அனைத்தும் மனித உடலின் உள்கட்டமைப்பை ஒத்திருக்கின்றன. ஸ்தம்பங்ககளின் எண்ணிக்கை  இருபத்தி  நான்கு, முப்பத்தி ஆறு, அறுபத்தி  நான்கு, தொண்ணூற்றி ஆறு, நூற்றி எட்டு, ஆயிரத்தி எட்டு என்று இவ்வாறு படைப்பின் விரிவிலுள்ள தத்துவங்களின் பிரதிநிதியாக  வந்துள்ளன.

படுத்துள்ள நிலையில் உள்ள  ஒரு  மனிதஉடலுக்கு ஒப்பிடும்போது  பாதங்களே  முன்வாசல், ஜனனேந்த்ரியம் த்வஜஸ்தம்பம், வயிறே பலிபீடம், இதயமானது நவரங்கம், கழுத்து ஸுகநாஸி, தலை கர்ப்பக்ருஹம், ப்ரூமத்யத்தின் ஆக்ஞாசக்ரஸ்தானமே மூலபீடம். செங்குத்தான நிலையில் உள்ள மனிடஉடலுக்கு ஒப்பிட்டு  பார்த்தோமானால் பாதங்களே நிதிகும்பம்,  நாளங்களே முழங்கால்கள், அஸ்திவாரங்களே தொடைகள், இடுப்பு மற்றும்  வயிற்றுப்பகுதிகளே  சுவர்கள், தோளே வலபி, கைகள் ப்ராகாரங்கள், நாக்கானது மணி, இதயமே இறைவனின் சிற்பம், கழுத்தே விமானம், தலையே சிகரம், ஸஹஸ்ராரம் எனப்படும்  ப்ரம்மரந்த்ரமே கலசங்களாகி உள்ளன.

 இனி, தத்வமயமாய் யோகத்தின் ஒருங்கிணைப்பான சக்ரமயமாயும் ஒரு ஒற்றுமையை காணலாம். ஐந்து வகையான கோசங்களின் பார்வையில் நோக்கினால் வெளிப்ராகாரம் அன்னமயமாகவும், உள் ப்ராகாரம்  ப்ராணமயமாகவும், நவரங்கசுற்று மனோமயமாகவும், உள் ப்ராகாரம்  விஞ்ஞானமயமாகவும் மற்றும் கர்ப்பக்ரஹம் ஆனந்தமய கோசமாகவும் கூறப்படுகிறது.

ஆலயம் என்பது நம் பண்டைய மஹரிஷிகளின் தவத்தின் பயனாய் யக்ஞம்-தானம்-தவம், ருதம்-ஸத்யம்-தர்மம், உலகவாழ்க்கையின் செழிப்பு-ஆன்மீகவளர்ச்சி, மற்றும் நான்கு வகையான புருஷார்த்தங்களின் அடிப்படையில் சிற்ப பூஜை வடிவில் பரவியுள்ளது. ஆலயம்  என்னும் தத்துவம்  தர்மம், பிரம்மம், ரஸம் என்னும் மூன்று சிறப்பான வழிகளால் கூறப்பட்டு, க்ஷேத்ரம்-தீர்த்தம்-யாத்திரையாகி, ஜீவனை தேவனாக்கும் உன்னதமான உறுதியான சங்கல்பத்துடன் கூடியுள்ளது. இது தேச காலத்திற்கு உட்பட்டு மாறுபடும்  பிண்டாண்டத்தில்,  மாறுபடாத பிரம்மாண்டத்தைக் காணும்  ஒரு  முயற்சியாக உள்ளது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, February 3, 2022

உடலும் ஆலயமும் - 1 (Udalum Alayamum - 1)

மூலம்: கஜானன பட்டா 
தமிழாக்கம்: C R ஸ்ரீ தர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


இறைவனின் மகத்தான படைப்பை பிரம்மாண்டம் என்று கூறினால், அதன் சுருக்கமான வடிவாகிய மனித உடலை பிண்டாண்டம் என்று கூறியுள்ளனர். மிகப் பரந்த உருவமுள்ள ஒரு மரத்தின் அனைத்து பாகங்களும் அதன் விதையில் அடங்கி இருப்பது போல் பிரம்மாண்டத்தில் உள்ள அனைத்து தத்துவங்களும் பிண்டாண்டத்தில் அடக்கம். ஜடப்பொருளான இவ்வுடலில் சைதன்யத்தை  கண்டுகொண்ட நம் முன்னோர்களான மகனீயர்கள் பௌதிகம், தைவிகம் மற்றும்  ஆத்யாத்மிகம் என்னும் மூன்று மட்டங்களின் சத்தியத்தை அறிவதற்கு ஏற்ற ஒரு தெய்வீகமான கருவியாக இவ்வுடலை கண்டனர். அவர்கள் கண்ட இவ்வுடலாகிய கருவியை வர்ணிக்கும் முறை இவ்வாறுள்ளதென சாற்றினர் :

      இம்மனித உடல், விரிவான படைப்பையும், படைப்பின் தொடக்கத்தில் ஒளிரும் பேரொளியையும் அறிந்துகொள்ள  ஒரு கருவியாக உள்ளது. உலகில், தூரத்தில் உள்ள ஒரு பொருளை  அறிய தொலை நோக்கி உள்ளது போல், நுணுக்கமான பொருளை  அறிய நுண்ணோக்கி உள்ளது போல், அனைத்து சத்திய-ருதங்களை  அறியும்  தொலை நோக்கியாகவும்,  நுண்ணோக்கியும், ஊடுருவிப் பார்க்க வல்லதாகவும் உள்ள கருவி நமது உடலேயாகும். அவைகளைப் பற்றிய விரிவான அறிவை சாதாரணமான மனிதனுக்கும் அறிவுறுத்தும் வகையில், இந்த உடலின் ஒரு நகலாக ஆலயங்களை உருவாக்கினர். அப்பொழுதிலிருந்தே இந்த ஆலய வழிபாட்டு கலாசாரம் வளர்ந்து வந்தது. ஆகையால் தான் "தேஹோ தேவாலய:ப்ரோக்த: ஜீவோ ஹம்ஸ: ஸநாதன:" என்னும் கூற்றும் வழக்கில் வளர்ந்து வந்தது. எக்காலத்திலும் திகழும் பேரொளியான இறைவனின் தரிசனத்திற்கான ஓர் இடமாக இவ்வுடலைக் காண முடிந்தது.


தசத்வார புரம் தேஹம்  தச நாடீ மஹாபதம் |

தசபிர் வாயுபிர்  வ்யாப்தம் தசேந்த்ரிய பரிச்சதம்  ||

தேஹம் விஷ்ண்வாலயம் ப்ரோக்தம்

ஸித்திதம் ஸர்வ தேஹிநாம்  |

தேஹம் சிவாலயம் ப்ரோக்தம்

 ஸித்திதம் ஸர்வ  தேஹிநாம்  ||

 

      நாம் நம் முகத்தையே கண்ணாடியில் கண்டு ஆனந்தப்  படுகிறோம்.                       அவ்விதம் நம்மையே நாம்  காண்பது என்றால், கேவலம்  இந்த வெளி உடலை அல்ல. இந்த வெளிப்போர்வையின் பின் உள்ள நுணுக்கமான மற்றும் பரரூபமான இறைவன் வரை நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு  பார்ப்பதை சுயபரிசோதனை என்னலாம். இந்த சுய-ஆத்ம பரிசோதனையை நமக்குள்ளேயே நாம் செய்து கொள்ள முடியும். ஆனால் அனைவருக்கும் அவ்வகையான திறமை இராது. அதற்காக, ஒரு அறம் செறிந்த மெருகேற்றினால் அது சாத்தியமாகலாம். அத்தகைய மெருகு ஒரு ஆலயத்திலிருந்து கிடைக்க வேண்டியுள்ளது.


இம்மைக்கும் மறுமைக்குமான பாலம் - ஆலயம்

இவ்வுடலின் மூலம் ஆத்ம  சுய பரிசோதனை செய்து அந்த அனுபவத்தை பெறுவதற்கான உபாயமாக ஆகமசாஸ்திரம் (ஆகதம்-கதம்-மதம்) உருக்கொண்டது.  இந்த சாஸ்திரம் ஆராதனம், உற்சவம் முதலிய முறைகளால் உள்உறையும் ஆனந்தத்தை அனுபவிக்க ஒரு பாலமாயுள்ளது. ஆலயத்திலுள்ள  அர்ச்சா விக்ரஹம் ஆத்மனுடைய நிலையில் (பிரதிநிதியாய்) உள்ளது. முக்குணங்களின் பிரதிநிதியாய் மூவர்ணத் திரையை விலக்கி இறைவனுடைய தரிசனத்தை செய்விக்கவும், அந்த  ஆனந்தத்தை நோக்கி  வழி காட்டவும் வல்லமையுடைய ஒரு அர்ச்சகர் தேவை. அவ்வாறிருந்தால்  சிலையும் சங்கரனாகிவிடும். இவ்வாலயம் நம்மை இம்மை இன்பத்திலிருந்து மேலுலக இன்பத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாகவும்  உள்ளது. "அடையாளச் சின்னமான மோதிரம் இல்லாததால் துஷ்யந்தனுக்கு இன்பமயமான நிமிடம் விஷமயமான நிமிடமாயிற்று. பிறகு அடையாளச் சின்னம் கிடைத்தவுடன் விஷநிமிடம் இன்பமயமான நிமிடமாக மாறிற்று. அவ்வாறே இவ்வுலகில் உள்ளோரை வைகுண்டத்திற்கும், கைலாசத்திற்கும் அழைத்துச் செல்லும் ஒரு அடையாளச்(நினைவு) சின்னமே ஆலயமாகும்" என்னும்  மஹாயோகியான ஸ்ரீரங்கமஹாகுருவின் வாக்கு இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Saturday, December 22, 2018

Temple and the human body

Original Kannada article: Vidwan Gajanana Bhatta
English translation: Smt Padmini Shrinivasan


The almighty’s mammoth creation is known as Brahmaanda, while a human body being its miniature model, is called Pindaanda. Just as the entire plan for the expansion of a tree is condensed in a seed, all the tattvas in the Brahmaanda are embedded in the Pindaanda too. Maharshis who experienced the divine power within their gross body, realised that the human body is a divine gadget capable of comprehending the absolute truth in terms of the gross, the subtle and the extremely subtle aspects of creation. This human body is an instrument meant to understand God’s creation and experience the divine light which exists at the root of all this creation. Just as we use a telescope to view distant objects and  microscopes to view tiny objects, to understand the manifest and un-manifest forms of the Brahman in this world, our body serves as a telescope, microscope as well as a vitreous medium to realise the ultimate within. To convey this profound truth to even the ordinary mortal, temples were constructed as a replica of the human body. Thus grew the Temple culture. Thence the saying in Sanskrit  “Deho Devaalayaha Prokto Jeevohamsaha Sanaatanaha” means - “The body is a temple and Jiva (the Self) is the eternal Hamsa (The Swan)”.  The body was seen as a seat of the experience of the divine effulgent light within.


Dashadvaarapuram deham dashanaadeemahapatham
Dashabhirvayubhirvyaaptham dashendriyaparicchadam
Deham vihnvaalayam proktam siddhidam sarva dehinaam
Deham shivaalayam proktam siddhidam sarva dehinaam

Seeing within us
 
We look at our face in a mirror and feel elated. In a like manner looking at ourselves doesn’t just mean looking at our outer body, it involves a deeper vision extending beyond the outer frame, constituted by the subtle and the extremely subtle aspects of human creation. This process is called avalokana - ‘seeing within ourselves’. Though possible not everyone is endowed with the required ability to do this. It becomes possible by certain processes of refinement called samskaaras. The institution of temple is one such instrument for bestowing samskaaras. In fact, these methods have been the driving principle behind the agama shastras themselves. In the temples, that are a representation of the body, the atman is the deity and the trigunas- Sattva, Rajas and Tamas are the curtain composed of the three colours white, red and black. In order to set aside the curtain and bring on the joy of the experience of the deity requires an archaka. The even a stone becomes verily the Lord Shankara. The temple is thus a bridge that elevates us from the gross earthly existence to the divine firmament. Shakuntala’s lost ring resulted in Dushyanta’s intimate relationship with Shakuntala turning sour; The same ring served as an impetus for Dushyanta to recall the past nectarine moments with Shakuntala. The temple is akin to that ring, reminding people on earth of their real abodes Vaikuntha and Kailasa. These words of the great Yogi Sriranga Mahaguru must for ever be ruminated upon.


What is within the body instrument?

The yogis’ who peered deep into this human instrument, beheld seven important centres known as Moolaadhaara, Swaadhishthaana, Manipura, Anaahata, Vishuddhi, Aajnya, and Sahasraara. These centres are like seven gateways to experience the divine power within us. Out of these seven, three are very important. Out of these three one is predominant. This structure of our inner self is portrayed in a temple with seven doors or three doors or at times one main door into the sanctum.




The flag pole (dwaja sthambha) in front of every temple represents our spine. The spiritual up lifting of the soul happening in the sanctum sanctorium is represented by one, three, five and seven Kalashas on top of the shikhara directly above the sanctum sanctorium. Carvings all around, on the walls of the temple depict in succession, the mundane, divine and spiritual truths of our life.  Carvings/sculptures of stories narrating the conflicts arising within us due to baser instincts and the ultimate victory of good are depicted. Depiction of how the 64 kalas and vidyas manifest in the realized may be seen. Temples are endowed with twenty four, thirty six, sixty four, ninety six, hundred and eight, or one thousand eight pillars representing the tattvas of the Lord’s creation.

Comparing the plan of the temple with the human body, the feet stand for the main entrance. The Dwaja sthambha (flag pole at the entrance) represents the Svaadhishthana chakra; the Balipeeta stomach / Manipura chakra; the Navaranga or Nrityamantapa  – heart or Anaahata;  the  Sukanaasi – neck;  the Garbha griha (sanctum sanctorium) – head; the seat of the deity is the middle of the eyebrows (i.e. the place of Aajnya chakra).

Similarly comparing the elevation of the temple with the human body, the feet represent – Nidhi kumbha – part of ritual pot over which the temple is constructed; knee – the Naala (channels); thigh –foundation; waist and the stomach are the walls;  shoulder – Valabhi;  hands - Praakaara (open space round the temple meant for circumambulation);  tongue – the Temple bell; heart- the Devamoorti; neck - Vimana ; head – Shikhara; Brahma randhra (or sahasraara) - the Kalashas.

Extending the vedantic philosophy of pancha kosha or five sheaths surrounding the self or Atman, the outermost is Annamaya i.e. sheath of physical self; the place of circumambulation is Praanamaya – embodied by the Prana shakti; Navaranga paridhi is Manomaya; inner circumambulation path is vijnaanamaya; Garbhagruha (sanctum) is the ultimate innermost Aanandamaya.



A fruit of penance

Thus a temple is a fruit of the penance of Bharata Maharshis. It is at once a model of the four-fold path of Purushaarthas’,  Yagnya-Daana-Tapas; Rita -Satya-Dharma. It achieves worldly and spiritual well-being by means of worshipping the deity – the vibhuti of the parabrahman. Built upon the triad of Dharma-Brahma-Rasa, the temple enables the elevating journey of pilgrimage to a sacred kshetra, a teertha. It has as its purpose the delivering of a jeeva unto Deva. It is a heroic effort to see within this pindaanda that is bound by space and time, the boundless Brahmanda and the Parabrahman.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs

Saturday, November 3, 2018

ದೇಹ ಮತ್ತು ದೇವಾಲಯ (Deha mattu devalaya)

ಲೇಖಕರು: ವಿದ್ವಾನ್ ಗಜಾನನ ಭಟ್ಟರೇವಣಕಟ್ಟಾ



ಭಗವಂತನ ಬೃಹತ್ಸೃಷ್ಟಿಯನ್ನು ಬ್ರಹ್ಮಾಂಡವೆಂದರೆ, ಅದರ ಸಂಕ್ಷಿಪ್ತ ಮಾದರಿಯಾದ ಮಾನವ ದೇಹವನ್ನು ಪಿಂಡಾಂಡವೆಂದಿದ್ದಾರೆ. ಮಹಾವಿಸ್ತಾರರೂಪವಾದ ವೃಕ್ಷದ ಎಲ್ಲ ಅಂಶಗಳೂ ಬೀಜದಲ್ಲಿ ಅಡಗಿರುವಂತೆ ಬ್ರಹ್ಮಾಂಡದಲ್ಲಿರುವ ಸಮಸ್ತ ತತ್ತ್ವಗಳೂ ಪಿಂಡಾಂಡದಲ್ಲಿ ಅಡಕವಾಗಿವೆ. ಜಡದೇಹದಲ್ಲಿ ಚೈತನ್ಯವನ್ನು ಸಾಕ್ಷಾತ್ಕರಿಸಿಕೊಂಡ ಆ ಮಹಾಮನೀಷಿಗಳು ಭೌತಿಕ-ದೈವಿಕ-ಆತ್ಮಿಕವಾದ ಮೂರು ಸ್ತರದ ಸತ್ಯಗಳನ್ನು ಅರಿಯಲು ಅನುಗುಣವಾದ ಒಂದು ದಿವ್ಯಯಂತ್ರವನ್ನಾಗಿ ದೇಹವನ್ನು ಅವರು ಮನಗಂಡರು. ಅವರು ಕಂಡಂತೆ ಈ ದೇಹಯಂತ್ರವನ್ನು ವರ್ಣಿಸುವ ಪರಿ ಹೀಗಿದೆ.

ಎಂಬುದಾಗಿ ಸಾರಿದರು. ಈ ಮಾನವ ದೇಹವು ಸಮಗ್ರ ಸೃಷ್ಟಿಯನ್ನೂ ಹಾಗೆ ಸೃಷ್ಟಿಮೂಲದಲ್ಲಿ ಬೆಳಗುತ್ತಿರುವ ಪರಂಜ್ಯೋತಿಯನ್ನು ಅರ್ಥಮಾಡಿಕೊಳ್ಳಲು ಒಂದು ಸಾಧನವಾಗಿದೆ. ಲೋಕದಲ್ಲಿ ದೂರದ ವಸ್ತವಿನ ಅರಿವಿಗೆ ದೂರದರ್ಶಕವಿರುವಂತೆಸೂಕ್ಷ್ಮವೀಕ್ಷಣೆಗೆ ಸೂಕ್ಷ್ಮದರ್ಶಕವಿರುವಂತೆಎಲ್ಲ ಸತ್ಯ-ಋತಗಳನ್ನು ಅರಿಯಬಲ್ಲ ದೂರದರ್ಶಕವೂ ಸೂಕ್ಷ್ಮದರ್ಶಕವೂ ಪಾರದರ್ಶಕವೂ ನಮ್ಮ ದೇಹವೇ ಆಗಿದೆ. ಅದರ ಸಮಗ್ರ ಪರಿಚಯವನ್ನು ಸಾಮಾನ್ಯ ಬುದ್ಧಿಯ ಮಾನವನಿಗೂ ಅರಿವು ಮಾಡಿಕೊಡಲು ಈ ದೇಹದ ಒಂದು ಪ್ರತಿಕೃತಿಯಾಗಿ ದೇವಾಲಯವನ್ನು ರಚಿಸಿದರು. ಅಲ್ಲಿಂದಲೇ ಈ ದೇವಾಲಯ ಸಂಸ್ಕೃತಿ ಬೆಳೆದು ಬಂದಿತು. ಆದ್ದರಿಂದಲೇ ದೇಹೋ ದೇವಾಲಯಃ ಪ್ರೋಕ್ತಃ ಜೀವೋ ಹಂಸಃ ಸನಾತನಃ ಎಂಬ ಮಾತು ಬೆಳೆದು ಬಂತು. ಸದಾತನವಾದ ಪರಂಜ್ಯೋತಿಯ ದರ್ಶದ ನೆಲೆಯಾಗಿ ದೇಹವನ್ನು ಕಾಣಲಾಯಿತು.
ದಶದ್ವಾರಪುರಂ ದೇಹಂ ದಶನಾಡೀಮಹಾಪಥಮ್ | 
ದಶಭಿರ್ವಾಯುಭಿರ್ವ್ಯಾಪ್ತಂ ದಶೇಂದ್ರಿಯಪರಿಚ್ಛದಮ್ || 
ದೇಹಂ ವಿಷ್ಣ್ವಾಲಯಂ ಪ್ರೋಕ್ತಂ ಸಿದ್ಧಿದಂ ಸರ್ವದೇಹಿನಾಮ್ | 
ದೇಹಂ ಶಿವಾಲಯಂ ಪ್ರೋಕ್ತಂ ಸಿದ್ಧಿದಂ ಸರ್ವದೇಹಿನಾಮ್ ||

ನಮ್ಮ ಮುಖವನ್ನೇ ನಾವು ಕನ್ನಡಿಯಲ್ಲಿ ನೋಡಿ ಸಂತೋಷಪಡುತ್ತೇವೆ. ಅದೇ ರೀತಿ ನಮ್ಮನ್ನೇ ನಾವು ನೋಡುವುದು ಎಂದರೆ ಕೇವಲ ಹೊರಮೈಯನ್ನಲ್ಲ. ಈ ಹೊರ ಕವಚದ ಹಿಂದಿರುವ ಸೂಕ್ಷ್ಮ ಮತ್ತು ಪರರೂಪದವರೆಗೂ ನಮ್ಮನ್ನು ನಾವು ನೋಡಿಕೊಳ್ಳಬೇಕು. ಹಾಗೆ ನೋಡುವುದನ್ನು ಆತ್ಮಾವಲೋಕನವೆನ್ನಬಹುದು. ಈ ಆತ್ಮಾವಲೋಕನವನ್ನು ತನ್ನಲ್ಲೆ ತಾನು ಮಾಡಿಕೊಳ್ಳಲು ಸಾಧ್ಯವಿದೆ. ಆದರೆ ಎಲ್ಲರಿಗೂ ಆ ಸಾಮರ್ಥ್ಯವಿರುವುದಿಲ್ಲ. ಅದಕ್ಕಾಗಿ ಒಂದು ಸಂಸ್ಕಾರ ಕೊಟ್ಟಾಗ ಸಾಧ್ಯವಾಗುವುದು. ಅಂತಹ ಸಂಸ್ಕಾರ ದೇವಾಲಯದಿಂದ ದೊರಕಬಹುದಾಗಿದೆ. ಈ ದೇಹದ ಮೂಲಕ ಆತ್ಮಲೋಕನವನ್ನು ಮಾಡಿ ಆ ಅನುಭೂತಿಯನ್ನು ಪಡೆಯುವ ಉಪಾಯವಾಗಿ ಆಗಮಶಾಸ್ತ್ರವು ಪ್ರವರ್ತನೆಗೊಂಡಿತು. ಆಗತ-ಗತ-ಮತರೂಪವಾಗಿ ವಿಸ್ತಾರವಾದ ಈ ಶಾಸ್ತ್ರವು ಆರಾಧನೆ-ಉತ್ಸವ ಮೊದಲಾದ ವಿಧಾನಗಳಿಂದ ಒಡಲೊಳಗಿನ ಆನಂದವನ್ನು ಅನುಭವಿಸಲು ಸೇತುವಾಗಿದೆ. ಆತ್ಮಸ್ಥಾನದಲ್ಲಿ ಆಲಯದ ಅರ್ಚ್ಯಾಮೂರ್ತಿಯಿದ್ದು ತ್ರಿಗುಣಗಳ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ತ್ರಿವರ್ಣದ ತೆರೆ ತೆರೆದು ದೇವದರ್ಶನ ಮಾಡಿಸುವಆ ಆನಂದದತ್ತ ದಿಗ್ದರ್ಶನ ನೀಡಬಲ್ಲ ಒಬ್ಬ ಅರ್ಚಕನಿರಬೇಕು. ಆಗ ಶಿಲೆಯೂ ಶಂಕರನಾಗುವುದು. ಈ ದೇವಾಲಯವು ನಮ್ಮನ್ನು ಭುವಿಯ ಜೀವನದಿಂದ ದಿವಿಯ ಆನಂದದೆಡೆಗೆ ಕೊಂಡೊಯ್ಯುವ ಸೇತುವೂ ಆಗಿದೆ. "ಅಭಿಜ್ಞಾನದ ಉಂಗುರವು ಇಲ್ಲದ್ದರಿಂದ ದುಷ್ಯಂತನಿಗೆ ರಸನಿಮಿಷ ವಿಷನಿಮಿಷವಾಯಿತು. ಮತ್ತೆ ಅಭಿಜ್ಞಾನ ದೊರೆತು ವಿಷನಿಮಿಷ ರಸನಿಮಿಷಕ್ಕೆ ತಿರುಗಿತು. ಹಾಗೆಯೇ ಭೂಮಿಯಲ್ಲಿದ್ದವರನ್ನು ವೈಕುಂಠಕೈಲಾಸಕ್ಕೆ ಕೊಂಡೊಯ್ಯುವ ಅಭಿಜ್ಞಾನವೇ ದೇವಾಲಯ. ಎಂಬ ಮಹಾಯೋಗಿ ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುವಿನ ಸಂದೇಶನುಡಿ ಮನನೀಯವಾದುದು.
ಈ ದೇಹಯಂತ್ರವನ್ನು ಗಮನಿಸಿದ ಯೋಗಿಗಳು ಇದರಲ್ಲಿ ಮೂಲಾಧಾರ, ಸ್ವಾಧಿಷ್ಠಾನ, ಮಣಿಪೂರ, ಅನಾಹತ, ವಿಶುದ್ಧಿ, ಆಜ್ಞಾ, ಸಹಸ್ರಾರವೆಂಬುದಾಗಿ ಏಳು ಕೇಂದ್ರಗಳನ್ನು ದರ್ಶನ ಮಾಡಿದರು. ಈ ಏಳು ಕೇಂದ್ರಗಳು ಏಳು ದ್ವಾರಗಳಂತೆ ಇದ್ದು ಒಳಗೆ ಬೆಳಗುವ ಪರಮಾತ್ಮನ ದರ್ಶನಕ್ಕೆ ದಾರಿ ಮಾಡಿ ಕೊಡುತ್ತವೆ. ಈ ಏಳು ಕೇಂದ್ರಗಳಲ್ಲಿ ಮೂರು ಕೇಂದ್ರಗಳು ಅತ್ಯಂತ ಮುಖ್ಯವಾದವುಗಳಾಗಿವೆ. ಅವುಗಳಲ್ಲಿ ಒಂದು ಅತ್ಯಂತ ಪ್ರಧಾನವಾದದ್ದು. ಹೀಗಿರುವ ಅಂತರಂಗದ ವ್ಯವಸ್ಥೆಯನ್ನು ಪ್ರತಿನಿಧಿಸಿ ದೇವಾಲಯದಲ್ಲಿಯೂ ಏಳು ದ್ವಾರ, ಮೂರು ದ್ವಾರ, ಒಂದು ದ್ವಾರರೂಪವಾದ ವ್ಯವಸ್ಥೆಯನ್ನು ಅಳವಡಿಸಿದರು.
ಬೆನ್ನುಮೂಳೆಯ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ಒಂದು ಧ್ವಜಸ್ತಂಭ. ದೇವನ ಸನ್ನಿಧಿಯಲ್ಲಿ ಉಂಟಾಗುವ ಊರ್ಧ್ವಮುಖತೆಯ ಪ್ರತೀಕವಾಗಿ ಶಿಖರದಲ್ಲಿ ಒಂದು, ಮೂರು, ಐದು, ಏಳು ಕಲಶಗಳ ವ್ಯವಸ್ಥೆ. ದೇವಾಲಯದ ಸುತ್ತಲೂ ಭಿತ್ತಿಯಲ್ಲಿ ಕ್ರಮವಾಗಿ ಭೌತಿಕ, ದೈವಿಕ, ಆಧ್ಯಾತ್ಮಿಕವಾದ ಕೆತ್ತನೆಗಳು. ಅಂತರಂಗದಲ್ಲಿ ನಡೆಯುವ ಸದ್ಭಕ್ತಿಗಳ ಸಂಘರ್ಷ ಹಾಗೂ ಸತ್ ಶಕ್ತಿಗಳ ವಿಜಯದ ಕಥೆಗಳ ಕೆತ್ತನೆ. ಅರವತ್ನಾಲ್ಕು ವಿದ್ಯೆಗಳ ವಿವಿಧ ಕುರುಹುಗಳು ಇವೆಲ್ಲವೂ ಮಾನವ ದೇಹದ ಒಳ ರಚನೆಗೆ ಹೊಂದಿರುವಂತಹವುಗಳು. ಸ್ತಂಭಗಳ ಸಂಖ್ಯೆಯಾದರೂ ಇಪ್ಪತ್ನಾಲ್ಕು, ಮೂವತ್ತಾರು,ಅರವತ್ನಾಲ್ಕು, ತೊಂಬತ್ತಾರು, ನೂರೆಂಟು, ಸಾವಿರದೆಂಟು ಹೀಗೆ ಸೃಷ್ಟಿ ವಿಕಾಸದಲ್ಲಿರುವ ತತ್ತ್ವಗಳ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ಬಂದಿದೆ. ಪಾದಗಳೇ ಮುಖದ್ವಾರ, ಜನನೇಂದ್ರಿಯವು ಧ್ವಜಸ್ತಂಭ, ಉದರವು ಬಲಿಪೀಠ, ಹೃದಯವು ನವರಂಗ, ಕೊರಳು ಸುಕನಾಸಿ, ಶಿರಸ್ಸು ಗರ್ಭಗೃಹ, ಭ್ರೂಮಧ್ಯದ ಆಜ್ಞಾಚಕ್ರಸ್ಥಾನವೇ ಮೂಲಬೇರಪೀಠ, ಇವುಗಳು ಆಸ್ತೃತರೂಪವಾದರೆ, ಲಂಬರೂಪದಲ್ಲಿ ಕಂಡಾಗ ಪಾದಗಳೇ ನಿಧಿಕುಂಭ, ನಾಳವೇ ಮೊಳಕಾಲು, ಬುನಾದಿಯೇ ತೊಡೆಗಳು, ಕಟಿ-ಉದರಗಳೇ ಕುಡ್ಯ(ಗೋಡೆ)ಗಳು, ಭುಜವೇ ವಲಭಿ, ಕರಗಳು ಪ್ರಾಕಾರ, ನಾಲಿಗೆ ಘಂಟೆ, ಹೃದಯವೇ ದೇವಮೂರ್ತಿ, ಕೊರಳೇ ವಿಮಾನ, ಶಿರಸ್ಸೇ ಶಿಖರ, ಬ್ರಹ್ಮರಂಧ್ರ(ಸಹಸ್ರಾರ)ವೇ ಕಲಶಗಳಾಗಿವೆ. ಇನ್ನು ತತ್ತ್ವಮಯವಾಗಿ, ಯೋಗಸಮನ್ವಯದ ಚಕ್ರಮಯವಾಗಿಯೂ ಸಾಮ್ಯತೆಯನ್ನು ಕಾಣಬಹುದಾಗಿದೆ. ಪಂಚಕೋಶಸಂಕ್ರಮಣದೃಷ್ಟಿಯಿಂದ ನೋಡಿದರೆ, ಹೊರಗಿನ ಪ್ರಾಕಾರ ಅನ್ನಮಯ, ಒಳಗಿನ ಪ್ರದಕ್ಷಿಣಪಥವು ಪ್ರಾಣಮಯ, ನವರಂಗ ಪರಿಧಿಯು ಮನೋಮಯ, ಅಂತಃಪ್ರದಕ್ಷಿಣಪಥವು ವಿಜ್ಞಾನಮಯ ಮತ್ತು ಗರ್ಭಗೃಹವು ಆನಂದಮಯವೆನಿಸಿದೆ.
ದೇವಾಲಯವು ಸನಾತನಾರ್‍ಯಭಾರತ ಮಹರ್ಷಿಗಳ ತಪಸ್ಸಿನ ಫಲಶ್ರುತಿಯಾಗಿದ್ದು ಯಜ್ಞ-ದಾನ-ತಪಸ್ಸು, ಋತ-ಸತ್ಯ-ಧರ್ಮ, ಅಭ್ಯುದಯ-ನಿಃಶ್ರೇಯಸ, ಪುರುಷಾರ್ಥಚತುಷ್ಟಯಗಳ ಮಾದರಿಯಲ್ಲಿ ವಿಭೂತಿಪೂಜಾರೂಪದಲ್ಲಿ ಹರಳುಗಟ್ಟಿದೆ. ಧರ್ಮ-ಬ್ರಹ್ಮ-ರಸಗಳೆಂಬ ಮಹಾತ್ರಿವೇಣಿಗಳಿಂದ ನಿರೂಪಿತವಾಗಿ ಕ್ಷೇತ್ರ-ತೀರ್ಥ-ಯಾತ್ರಾಮಯವಾಗಿ, ಜೀವನನ್ನು ದೇವನನ್ನಾಗಿಸುವ ಮಹೋನ್ನತ ಸಂಕಲ್ಪಹೊಂದಿದ ದೇವಾಲಯತತ್ತ್ವವು ದೇಶ-ಕಾಲಪರಿಚ್ಛಿನ್ನವಾದ ಪಿಂಡಾಂಡದಲ್ಲಿ ಅಪರಿಚ್ಛಿನ್ನವಾದ ಬ್ರಹ್ಮಾಂಡವನ್ನು ಕಾಣುವ ಪ್ರಯತ್ನವಾಗಿದೆ.

ಸೂಚನೆ: ಈ ಲೇಖನದ ಆಯ್ದ ಭಾಗಗಳು ವಿಜಯ ಕರ್ನಾಟಕ ಪತ್ರಿಕೆಯ ಬೋಧಿ ವೃಕ್ಷ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.