Showing posts with label 91_ayvmarticle. Show all posts
Showing posts with label 91_ayvmarticle. Show all posts

Friday, May 22, 2020

பகுத்தறிவின் பாதை (Pakuttarivin Aatai)

மூலம்: மைதிலி ராகவன் 
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  

முன்னொரு சமயம் காசி நகரில் வினோதமான வழக்கம் ஒன்று நிலவி வந்தது. அங்கு குடிமக்களில் எவரேனும் அரியணை ஏறி ஐந்து ஆண்டு காலம் தன்னிச்சையாக நாட்டை ஆளலாம். அதன் பிறகு அவனை கங்கா நதியின் அக்கரையில் உள்ள அடர்ந்த காட்டில் கை, கால்களை கட்டி வனவிலங்குகளுக்கு இரையாக்குவர். பலர் அதிகாரத்தின் ஆசையால் அரசனாக முன் வந்து முடிவில் கோரமான மரணம் அடைந்தனர். ஒரு சமயம் இளைஞன் ஒருவன் துணிந்து இதை ஏற்றான்.  ஐந்து ஆண்டு காலம் மிக்க அக்கறையுடன் குடிகளின் நன்மையை கருத்தில் கொண்டு அரசாண்டான். ஆட்சி காலம் முடிந்தவுடன் அவனை படகில் அக்கரைக்கு அழைத்து செல்ல வேண்டும். கங்கைகரை வரை கோலாகலமாக ஊர்வலம் நடந்தது. அரசன் தேரில்  இன்முகத்துடன் அமர்ந்திருந்தான். குடிகள் அனைவரும் அவனை கண்டு வியந்தனர். கோரமான முடிவை எதிர்கொள்ளும் இவன் முகத்தில் எவ்வாறு சிரிப்பும் சந்தோஷமும் இருக்கின்றன? படகு நகர்ந்தது. அப்போதும் இவன் இன்முகத்துடனேயே காணப்பட்டான். படகோட்டி சந்தேகத்துடன் வினவினான் "நதியில் குதித்து தப்பிக்கும் எண்ணம் ஏதாவது உண்டோ? அது இயலாது" என்றான். அரசன் 'நான் ஏன் தப்பிக்க வேண்டும்?! நிச்சயமாக இல்லை,' என பதிலுரைத்தான். படகோட்டி பயத்துடன் 'ஐயா உன் வருங்காலத்தை அறிந்தும் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கிறாய்' என வினவ அரசன் கரையை அடைந்ததும் உனக்கே புரியும் என பதிலளித்தான்.

கரையை அடைந்து அங்கு கண்ட காட்சியினால் படகோட்டி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அங்கு முன்பிருந்த அடர்ந்த காடு மறைந்து ஓர் அழகான பட்டணம் காணப்பட்டது. அநேக மந்திரி ப்ரமுகர்கள் மற்றும் குடிமக்கள் அரசனை வரவேற்க பூரண கும்பத்துடன் காத்திருந்தனர். அரசன் மென்மையாக சிரித்து விவரித்தான். "நான் என் ஆட்சி காலத்தில் காசி நகரை ஆளும்போதே ரகசியமாக காட்டை ஓர் நகரமாக மாற்றும் பணியையும் மேற்கொண்டேன். மிகவும் நெருக்கமான சிலரையும் இங்கே அனுப்பினேன். இப்போது நான் இப்பட்டணத்தின் அரசன்!"

வாழ்க்கையின் ரகசியத்தை உணர்த்தும் கதை இது. "காசி க்ஷேத்திரம் சரீரம்" என ஆதி சங்கரர் கொண்டாடியவாறு இவ்வுடலே காசி க்ஷேத்திரம். இதற்குள் உறையும் ஜீவனே அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் அரசன். சுகங்களை மட்டும் மனம் போன படி அனுபவித்து வாழ்ந்தால் வாழ்வின் இறுதியில் தன் கர்ம வினைகளால் கட்டப்பட்டு அதன் பயனை அனுபவிக்க நேரும். ஆயின் பகுத்தறிவுடன் கூடியவன் இவ்வுலகின் இன்பங்களுடனே  இறையுலகின் இன்பத்தையும் சிந்திக்கிறான். நற்செயல்களால்  ஜீவன் கர்மத்தின் கட்டிலிருந்து விடுபட்டு இறுதியில் இல்வாழ்க்கைக்கு பிறகும் ஆனந்தத்தை அடைகிறான்.

ஸ்ரீரங்க மஹாகுரு  "இறைவனை உணர்தல் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை. இதற்காக போராட வேண்டும். மனித உடல்  யோகம் (இறைவனுடன் இணைவது), போகம் (இவ்வுலக இன்பம்) இரண்டிற்கும் இருப்பிடம்" என்பதை வலியுறுத்தி கூறியுள்ளார். பகுத்தறிவின் வழி சென்று போகத்தின் கூடவே யோகத்திற்கும் வழிவகுத்து கொள்வோம். அப்போது நமக்கு  கிடைப்பது இவ்வுலகில் இன்பம் மற்றும் இறையுலகில் பேரின்பம்!

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம். 

Tuesday, May 14, 2019

ವಿವೇಕದ ದಾರಿ (vivekada daari)

ಲೇಖಕರು:  ಮೈಥಿಲೀ ರಾಘವನ್


ಹಿಂದೊಮ್ಮೆ ಕಾಶೀ ನಗರದಲ್ಲಿ ಹೀಗೊಂದು ವಿಚಿತ್ರ ಪದ್ಧತಿ ಜಾರಿನಲ್ಲಿತ್ತು. ಅಲ್ಲಿಯ ಪ್ರಜೆಗಳಲ್ಲಿ ಯಾರಾದರೂ ಸಿಂಹಾಸನವನ್ನೇರಿ ಐದು ವರ್ಷಗಳಕಾಲ ತಮ್ಮಿಚ್ಚೆಯಂತೆ ರಾಜ್ಯವಾಳಬಹುದು. ಆ ಕಾಲಾವಧಿಯ ನಂತರ ಅವರನ್ನು ಗಂಗಾನದಿಯ ಆಚೆಯ ದಡದಲ್ಲಿದ್ದ ದಟ್ಟವಾದ ಕಾಡಿನಲ್ಲಿ ಕೈಕಾಲುಗಳನ್ನು ಬಂಧಿಸಿ ಕಾಡುಮೃಗಗಳ ಪಾಲಿಗೆ ಎಸೆದುಬಿಡಲಾಗುವುದು. ಅನೇಕರು ಅಧಿಕಾರದ ಆಸೆಯಿಂದಾಗಿ ರಾಜನಾಗಲು ಮುಂಬಂದು ನಂತರ ಘೋರವಾದ ಸಾವನ್ನೆದುರಿಸಿದರು. ಒಮ್ಮೆ ಯುವಕನೊಬ್ಬನು ಈ ಸಾಹಸದ ಕಾರ್ಯಕ್ಕೆ ಕೈ ಹಾಕಿದ. ಐದು ವರ್ಷಗಳಕಾಲ ಅತ್ಯಂತ ಶ್ರದ್ಧೆಯಿಂದ ಪ್ರಜೆಗಳ ಹಿತದೃಷ್ಟಿಯೊಂದಿಗೆ ರಾಜ್ಯವಾಳಿದ. ಆಡಳಿತದ ಅವಧಿ ಮುಗಿದಂತೆಯೇ ಅವನನ್ನು ದೋಣಿಯಲ್ಲಿ ಕುಳ್ಳಿರಿಸಿ ಕರೆದೊಯ್ಯ ಬೇಕಿತ್ತು. ಗಂಗೆಯ ದಡದವರೆಗೂ ಸಂಭ್ರಮದ ಮೆರವಣಿಗೆ ಸಾಗಿತು. ರಾಜನು ಹಸನ್ಮುಖನಾಗಿ ರಥದಲ್ಲಿ ಆಸೀನನಾಗಿದ್ದ. ಪ್ರಜೆಗಳೆಲ್ಲರಿಗೂ ಆತನನ್ನು ನೋಡಿ ಅತ್ಯಾಶ್ಚರ್ಯವಾಯಿತು. ಕ್ರೂರವಾದ ಸಾವನ್ನಪ್ಪಲು ತೆರಳಿರುವವನಲ್ಲಿ ಈ ನಗುಮುಖ, ಸಂತೋಷವೇ!? ದೋಣಿಯು ಮುಂದೆ ಸಾಗಿತು. ಆದರೂ ಅವನು ಹಸನ್ಮುಖಿಯಾಗಿಯೇ ಇದ್ದ. ನಾವಿಗನು ಸಂಶಯದಿಂದ ಕೇಳಿದ- ನದಿಯಲ್ಲಿ ದುಮುಕಿ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳುವ ಉಪಾಯವೇನಾದರೂ ಹೂಡಿದ್ದೀಯೋ? ಅದು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. ರಾಜನು ಉತ್ತರಿಸಿದ ನಾನೆಲ್ಲಿಗೆ ತಪ್ಪಿಸಿಕೊಂಡು ಹೋಗಬೇಕಾಗಿದೆ? ಖಂಡಿತವಾಗಿಯೂ ಇಲ್ಲ ನಾವಿದನು ಅಚ್ಚರಿಯಿಂದ ಬೆರಗಾದನು ಅಯ್ಯಾ, ನಿನ್ನ ಮುಂದಿನ ಭವಿಷ್ಯ ತಿಳಿದಿದ್ದರೂ ಹೇಗೆ ಇಷ್ಟು ಪ್ರಸನ್ನನಾಗಿರುವೆ? ರಾಜನೆಂದ ಆಚೆಯ ದಡ ಸಮೀಪಿಸಿದಂತೆ ನಿನಗೇ ತಿಳಿಯುವುದು.

ದಡ ಸಮೀಪಿಸಿದಂತೆ ಎದುರಾದ ದೃಶ್ಯದಿಂದ ನಾವಿಕನ ಆಶ್ಚರ್ಯ ಎಣೆಯಿಲ್ಲದಾಯಿತು. ಅಲ್ಲಿ ಇದ್ದ ದಟ್ಟವಾದ ವನಪ್ರದೇಶ ಮರೆಯಾಗಿ ಸುಂದರವಾದದ್ದೊಂದು ಪಟ್ಟಣ ಕಾಣಿಸುತ್ತಿತ್ತು. ದಡದಲ್ಲಿ ಅನೇಕ ಜನ ಮಂತ್ರಿ-ಪ್ರಮುಖರು ರಾಜನನ್ನು ಸ್ವಾಗತಿಸಲು ಪೂರ್ಣಕುಂಭದೊಂದಿಗೆ ಕಾದಿದ್ದರು! ರಾಜನು ಮುಗುಳ್ನಗೆಯೊಂದಿಗೆ ವಿವರಿಸಿದ ನಾನು ನನ್ನ ಆಡಳಿತದಕಾಲದಲ್ಲಿ
ಕಾಶೀ ರಾಜ್ಯವನ್ನಾಳುವುದರ ಜೊತೆಜೊತೆಗೆ ರಹಸ್ಯವಾಗಿ ಕಾಡನ್ನು ಪಟ್ಟಣವನ್ನಾಗಿ ಮಾರ್‍ಪಡಿಸುವ ಕೆಲಸವನ್ನೂ ಕೈಗೊಂಡೆ. ಆಪ್ತರಾದ ಕೆಲವರನ್ನೂ ರಹಸ್ಯವಾಗಿ ಇಲ್ಲಿ ಕಳುಹಿಸಿದೆ; ಈಗ ನಾನು ಈ ಪಟ್ಟಣದ ಅರಸ!

ಜೀವನದ ಗುಟ್ಟನ್ನು ತಿಳಿಸುವ ಕಥೆಯಿದು. ’ಕಾಶೀಕ್ಷೇತ್ರಂ ಶರೀರಂ’ ಎಂದು ಶಂಕರಭಗವದ್ಪಾದರು ಕೊಂಡಾಡಿದಂತೆ ಈ ಶರೀರವೇ ಕಾಶೀಕ್ಷೇತ್ರ. ಇದರೊಳಗೆ ವಾಸವಾಗಿರುವ ಜೀವನೇ ಸಕಲ ಭೋಗಗಳನ್ನನುಭವಿಸುವ ಅರಸ. ಭೋಗಗಳಷ್ಟನ್ನೇ ಅರಸಿ ಮನಸೋಚ್ಚೆ ವರ್ತಿಸಿದರೆ ಜೀವಿತಾವಧಿ ಕಳೆದಾಗ ತನ್ನ ಕರ್ಮಗಳೆಂಬ ಪಾಶಗಳಿಂದಲೇ ಕಟ್ಟಲ್ಪಟ್ಟು ಅದರ ಫಲವನ್ನು ಅನುಭವಿಸಬೇಕಾಗುವುದು. ಆದರೆ ವಿವೇಕಿಯಾದವನು ಇಹಲೋಕದ ಸುಖಾನುಭವದ ಜೊತೆಯಲ್ಲಿಯೇ ಪರಲೋಕದ ಸುಖಚಿಂತೆಯನ್ನೂ ಸಹ ಮಾಡುತ್ತಾನೆ. ಸತ್ಕರ್ಮಗಳ ಆಚರಣೆಯಿಂದಾಗಿ ಜೀವಿಯು ಕರ್ಮಬಂಧನದಿಂದ ಬಿಡಿಸಿಕೊಂಡು ದೇಹಾವಸಾನದನಂತರವೂ ಸುಖವನ್ನೇ ಪಡೆಯುತ್ತಾನೆ.

ಶ್ರೀರಂಗಮಹಾಗುರುಗಳು  “ ಪರಮಾತ್ಮದರ್ಶನವು ಎಲ್ಲ ಮಾನವರ ಜನ್ಮಸಿದ್ಧವಾದ ಹಕ್ಕು. ಇದಕ್ಕಾಗಿ ಹೋರಾಡಬೇಕು. ಮಾನವ ದೇಹ ಯೋಗ(ಭಗವಂತನೊಡನೆ ಕೂಡುವುದು)-ಭೋಗಗಳೆರಡಕ್ಕು ನೆಲೆಮನೆಯಾಗಿದೆ” ಎಂಬುದನ್ನು ಒತ್ತಿ ಹೇಳಿದ್ದಾರೆ. ವಿವೇಕದ ದಾರಿಹಿಡಿದು ಭೋಗವನ್ನು ಅನುಭವಿಸುತ್ತ ಜೊತೆ ಜೊತೆಯಲ್ಲೇ ಯೋಗಕ್ಕೂ ದಾರಿಮಾಡಿಕೊಳ್ಳೋಣ. ಆಗ ನಮಗೆ
ಲಭಿಸುವುದು ಇಹದಲ್ಲಿ ಸುಖ, ಪರದಲ್ಲಿ ಪರಮಸುಖ!

ಸೂಚನೆ:  13/05/2019 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.