Showing posts with label 297_ayvmarticle. Show all posts
Showing posts with label 297_ayvmarticle. Show all posts

Thursday, July 1, 2021

வாழ்வின் வாயிலில் தேவரதம் (Vazhvin Vayilil Devaratam)

மூலம்: சுமேதா எம். ஏ

தமிழாக்கம்: வனஜா

மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



நாம் நம் அன்பிற்குரியவரின் இல்லத்திற்கு செல்கையில் அவர்களை நம் இல்லத்திற்கு வருமாறு அழைத்தல் இயற்கை. முக்கியமான நிகழ்வுகளில் நம் விருந்தினராக வரவேண்டுமென வற்புறுத்துவோம். சில நேரங்களில் அவர்களால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலாது. நாம் அன்புடன் அழைத்ததை மதித்து அச்சிக்கலுக்கு இணக்கமான ஒரு தீர்வை கண்டறிவர். குடும்ப தலைவர் தன் மகனை தன் ப்ரதிநிதியாக அனுப்புவார். நாம்     மகனுக்கு, தந்தைக்குரிய கௌரவத்தையும் மதிப்பையும் அளித்து தந்தைக்கே அவற்றை செலுத்தியது போன்ற நிறைவடைகிறோம். சாதாரணமாக நிகழும், நாம் வழக்கமாக கண்ணுறும்,  இத்தகைய நிகழ்வுகள் 'ரதோத்ஸவத்தின்' அதாவது இறைவனின் தேரோட்டத்தின் பின்னணியில் உள்ள கருத்தை விளக்கும். தினந்தோறும் இறைவனை (மூலவரை)கர்ப்பகிருஹத்தில் வழிபட்டாலும் அவனை இல்லத்திற்கு அழைத்து வழிபட விரும்புகிறோம். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வரமே ரதோத்ஸவம். 


   பாரதத்தின் முனிவர்கள் இறைவனின் மூல மூர்த்திக்கு ப்ரதிநிதியாக உத்ஸவ மூர்த்திகளை நிறுவியதன் காரணம் இதுவே. இத்தகு உத்ஸவ மூர்த்திகள் பூஜிக்கப்பட்டு கிராமத்தின்/நகரத்தின் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து செல்லபடுவர். மூலமூர்த்தி தன் அளப்பரிய அருளை உத்ஸவ மூர்த்தியின் வாயிலாக தன் அடியவர்களின்மேல் பொழிகிறார். அதே போன்று அடியவர்களின் பக்தியும் அவருக்கு செலுத்தப்படுகிறது


 உத்ஸவம் என்பது ஒரு யக்ஞத்தை குறிக்கும். அதாவது ஜீவனை மூலத்திற்கு உயர்த்தும். அதன் பொருள்: பரம்பொருளை (பரஞ்ஜோதியை) அனுபவித்து உணரும் பாதையில் நடத்தி செல்வது. இந்நிலையை அடைய தேரோட்டங்கள் முக்கிய பங்காற்றுக்கின்றன. இவ்விழாவின் போது பல வண்ணத்துடன் பல வகையான கோலங்கள் வீடுகளையும், வீதிகளையும் அலங்கரிக்கும். வாழ்கையெனும் கொடியைப்போல் இக்கோலங்கள் இறைவனை வணங்கி வரவேற்கின்றன. தேர் செல்லும் பாதை நெடுகிலும் வரிசையான விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. மக்கள் இறைவன் தங்கள் இல்லத்திற்கே வருவது போன்று கோலாகலமாக வரவேற்பர். ரதமானது அனைத்து வகையான வேத மந்திரங்களாலும், ஜேங்காரத்தாலும், துதி பாடல்கள், நடனம், மற்றும் இசை கருவிகளின் முழக்கத்தாலும் ஒளிரும்.  அனைத்து அடியவர்களும் இறைவனுக்கு, பழங்கள் பூக்கள், மற்றும் தீபாராதனையை அர்ப்பணிப்பர். அனைத்து பக்தர்களும் இறைவன்பால் ஒன்றிய மனதுடன் ரதத்தை வடம் பிடித்து இழுப்பர். தன் பக்தர்களுக்கு காட்சி அளித்த பின் உத்ஸவ மூர்த்தி மூல மூர்த்தியுடன் சென்று இணைவார்.


இங்கு ஸ்ரீரங்கமஹாகுரு உத்ஸவத்தின் நுணுக்கங்களை குறித்து இவ்வாறு விளக்கியுள்ளார். ரதத்தின் வடத்தை பற்றி இழுக்கையில் நம் உலகாயதனமான விருப்பங்களை விடுத்து இறைவனின் இச்சை எனும் ரதத்தில் சரணடைதல் வேண்டும்.


நம் உடல் ஆலயங்களுக்கும், ரதத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. ரதத்தை செலுத்துபவன் பரம புருஷனன்றி வேறில்லை. நம் கால்கள் ரதத்தின் சக்கரங்களுக்கு இணையானது. நம் உள்ளம்(இதயம்) மண்டபத்தை குறிக்கும். சோம-சூர்ய-அக்னி மண்டலங்கள் கோபுரத்தை ஒக்கும். சிரத்தின் உச்சியில் ஒளிர்வது ப்ரணவம்(ஓம்/ஓங்காரம்). இறைவன் பரிசாக அருளிய இவ்வுடலை பகவத்ரதமாக மாற்றுவது நம் தலையாய கடமையாகும்.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Monday, May 11, 2020

Divine Chariot at the Door-step of Life

Kannada Article by: MA Sumedha
English Rendering by: MR Yashaswini
 (Respond to lekhana@ayvm.in)



It is a very natural desire to invite our beloved ones to our houses just the way we visit them. Especially on special occasions we insist that they be our guests. There could be certain circumstances where they might not be able to grace the occasion with their presence. Respecting the affection with which we invite, they find an amicable solution for this quandary. The family head sends their son as their representative. In this situation, we pay all the respects and tributes to the son as though we are offering them to the father himself and find ourselves content and A very familiar and commonly observed scenario illustrated above also signifies the principle behind 'The Rathotsava' - the procession of the divine chariot. Although the deity is daily worshipped in the 'Garbhagruha' (the Sanctum Sanctorum) of the temple, there is a desire to 'invite' him home and worship him. The boon that fulfills this desire is nothing but Rathotsava. This is the reason why the 'Maharshis of Bhaarata' established the concept of 'Utsava Moorti' (Processional Deity). Being the representatives of the Moola Moorthis (Primary Deity), these Utsava Moorthis of the temples are worshipped and taken in procession through the streets of the village/town. The Moola Moorti showers his choicest blessings on all his devotees through the Utsava Moorthi. Similarly the devotion of all his devotees is also offered to him.

'Utsava' implies a Yajna (a ritual) that 'elevates' the Jeeva to its 'Source' which means that it is led in the path of experiencing 'Paranjyoti' (Supreme Light). 'Rathotsavas' are thus an important means to attain this state. Variety of colourful Rangolis decorates the houses and the streets during this festival. Similar to the creepers of life, these Rangolis bow to welcome the Lord. The entire path of the chariot is decorated with rows of lamps. People welcome the Lord with great grandeur as though He is entering their own houses. The Ratha sparkles amidst all the divine chants, Veda mantrasJayaghosha, cultural songs, dances and musical instruments. Every household offers fruits, flowers and mangalarathi to the Lord. All the devotees, with a one-pointed mind towards the Lord, pull the divine chariot together. After giving Darshana to all his devotees the Utsava moorti finally joins the Moola moorti.
Here, Sriranga Mahaguru has thrown light upon the nuances of this 'Utsava' as follows: "While pulling the ropes of this Ratha, we should rather surrender ourselves to the Ratha of Bhagawath Sankalpa (Will of the Lord) instead of yielding to our own Manoratha (chariot of our materialistic desires)".

Our body is also compared to the Ratha as well as to the temple. One who rides this Ratha is none other than the Parama Purusha. Our feet are analogous to the wheels of the RathaHrudaya (Heart) depicts the Mantapa (Pedastal). The Soma-Surya-Agni mandalas are compared to the Gopura (divine tower). In the pinnacle of the shiras (head) shines the Pranavaakshara (Om). It is our utmost duty to transform this god-gifted body to Bhagawath Ratha.

Note: The Kannada version of this article can be viewed at AYVM blogs. 

Monday, March 16, 2020

ಬಾಳ ಬಾಗಿಲಲ್ಲಿ ದೇವರಥ ! (Bala Bagilalli Devaratha!)

ಲೇಖಕರು:  ಶ್ರೀಮತಿ ಸುಮೇಧಾ
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ : lekhana@ayvm.in)


ತ್ಮೀಯರ ಮನೆಗೆ ಭೇಟಿ ನೀಡಿ ಕುಶಲ ವಿಚಾರಿಸುವಂತೆ, ಅವರನ್ನೂ ನಮ್ಮ ಮನೆಗೆ ಕರೆಯಬೇಕೆಂಬ ಹಂಬಲ ಸಹಜ. ಮನೆಯಲ್ಲಿ ವಿಶೇಷ ಸಮಾರಂಭಗಳಿದ್ದರಂತೂ ಅವರನ್ನು ಬರಲೇಬೇಕೆಂದು ಒತ್ತಾಯ ಮಾಡುತ್ತೇವೆ. ಆತ್ಮೀಯರನ್ನು ಆಹ್ವಾನಿಸಿದಾಗ ಕಾರಣಾಂತರದಿಂದ ಅವರಿಗೆ ಸಮಾರಂಭಕ್ಕೆ ಆಗಮಿಸಲು ಸಾಧ್ಯವಾಗದೆ ಇರುವ ಸನ್ನಿವೇಶ. ಆದರೆ ಆಹ್ವಾನದ ಹಿಂದಿರುವ ಪ್ರೀತಿಯನ್ನು ಮನ್ನಿಸಿ ಒಂದು ಯುಕ್ತಿಯನ್ನು ಹುಡುಕುತ್ತಾರೆ. ಆತ್ಮೀಯರಾದ ಮನೆ ಯಜಮಾನರು ತನ್ನ ಮಗನನ್ನು ಸಮಾರಂಭಕ್ಕೆ ಕಳುಹಿಸಿಕೊಡುತ್ತಾರೆ. ಇಲ್ಲಿ ಮಗನು ತಂದೆಯ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ಅಲ್ಲಿಗೆ ಹೋಗುತ್ತಾನೆ. ಆಗ ಅಲ್ಲಿ ತಂದೆಗೆ ಮಾಡಬೇಕಾದ ಮರ್ಯಾದೆ, ತೋರಿಸಬೇಕಾದ್ದ ಸ್ನೇಹ ಗೌರವಗಳನ್ನು ತಂದೆಯೇ ಬಂದಿರುವಂತೆ ಮಗನಿಗೆ ಅರ್ಪಿಸುತ್ತೇವೆ. ನಮ್ಮನ್ನು ಕೃತಾರ್ಥರೆಂದು ಭಾವಿಸುತ್ತೇವೆ.   

ಸಹಜವೂ ಚಿರಪರಿಚಿತವೂ ಆದ ಈ ಸಂಗತಿ ರಥೋತ್ಸವಗಳ ಅಂತರಾರ್ಥವನ್ನು ತಿಳಿಸುತ್ತದೆ. ದೇವಾಲಯದ ಗರ್ಭಗುಡಿಗೆ ಹೋಗಿ ನಿತ್ಯ ಪೂಜೆ ಸಲ್ಲಿಸುತ್ತಿದ್ದರೂ, ಭಗವಂತನನ್ನು ಮನೆಗೆ ಕರೆತರಬೇಕೆಂಬ ಬೇಡಿಕೆಗೆ ನೀಡಿದ ವರವೇ ರಥೋತ್ಸವ. ಆದ್ದರಿಂದಲೇ ಉತ್ಸವ ಮೂರುತಿಗಳನ್ನು ಭಾರತದ ಮಹರ್ಷಿಗಳು ರೂಪಿಸಿಕೊಟ್ಟಿದ್ದಾರೆ. ಮೂಲಮೂರ್ತಿಯ ಪ್ರತಿನಿಧಿಯಾಗಿ ಉತ್ಸವ ಮೂರ್ತಿಗಳನ್ನು ಪ್ರತಿ ದೇವಸ್ಥಾನದಲ್ಲೂ ಆರಾಧಿಸುತ್ತಾರೆ. ರಥೋತ್ಸವದಲ್ಲಿ ಮೆರವಣಿಸುತ್ತಾರೆ. ಆ ಮೂಲ ದೇವನು ತನ್ನ ಅನುಗ್ರಹವನ್ನು ತನ್ನ ಉತ್ಸವಮೂರ್ತಿಯ ಮೂಲಕ ಭಕ್ತರಿಗೆ ಕರುಣಿಸುತ್ತಾನೆ.  ಹಾಗೆ ಭಕ್ತಸಮೂಹದ ಭಾವವು ಸಾಕ್ಷಾತ್ ಮೂಲದೇವನಿಗೆ ಅರ್ಪಿತವಾಗುತ್ತದೆ. ಉತ್ಸವ ಎಂದರೆ ಮೇಲೆತ್ತುವ ಯಜ್ಞ. ಮೇಲಕ್ಕೆ ಅಥವಾ ಮೂಲಕ್ಕೆ ಅಂದರೆ ಪರಮಾತ್ಮ ಬೆಳಕಿನ ಸಾಕ್ಷಾತ್ಕಾರ, ದರ್ಶನ. ಅದನ್ನು ತಲುಪಲು ರಥ-ಉತ್ಸವಗಳು ಒಂದು ಮುಖ್ಯ ಸಾಧನ. ರಥಬೀದಿಯಲ್ಲು ಹಾಗು ಮನೆ ಮನೆಯಲ್ಲೂ ವಿಧವಿಧವಾದ ರಂಗವಲ್ಲಿ. ಈ ರಂಗವಲ್ಲಿಗಳು ನಮ್ಮ ಜೀವನದ ಬಳ್ಳಿಗಳಂತೆ ಬಾಗಿ ಸ್ವಾಮಿಯ ಸ್ವಾಗತಕ್ಕೆ ತತ್ಪರವಾಗಿರುತ್ತವೆ. ರಥಬರುವ ಬೀದಿ ಉದ್ದಕ್ಕೂ ದೀಪಮಾಲೆಗಳ ಅಲಂಕಾರಗಳು. ತಮ್ಮ ಮನೆಗೆ ಭಗವಂತನೇ ಆಗಮಿಸುತ್ತಿರುವನೆಂದು ಮನ ಮುಟ್ಟುವಂತೆ ವೈಭವೋಪೇತವಾಗಿ ಭಗವಂತನನ್ನು ಬರಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತಾರೆ. ಭಗವನ್ನಾಮ ಜಯಘೋಷ, ವೇದಘೋಷ, ವಾದ್ಯವೃಂದಗಳು, ಸಾಂಸ್ಕೃತಿಕ ಗಾಯನ, ನೃತ್ಯಗಳು, ನಂದಿಕೋಲು, ಡೊಲ್ಲುಕುಣಿತ, ಇತರ ನಾನಾ ಉಪಚಾರಗಳ ಮಧ್ಯದಲ್ಲಿ ದೇವರ ರಥವು ರಾರಾಜಿಸುತ್ತದೆ. ಪ್ರತಿ ಮನೆಯಲ್ಲೂ ದೇವರಿಗೆ ಫಲಪುಷ್ಪ ಸಮರ್ಪಣೆ, ಮಂಗಳಾರತಿಯನ್ನು ಮಾಡುತ್ತಾರೆ. ಭಕ್ತರಿಗೆ ದರ್ಶನವಿತ್ತು, ಪೂಜೆ ಸ್ವೀಕರಿಸಿ ಉತ್ಸವದೇವರು ಮೂಲಸ್ಥಾನ ಸೇರುತ್ತಾರೆ. ಎಲ್ಲರ ಮನಸ್ಸು ವಾಕ್ಕು ಭಗವನ್ಮಯವಾಗಿ ಒಗ್ಗೂಡಿ ಸಂಭ್ರಮದಿಂದ ರಥವನ್ನು ಎಳೆಯುತ್ತಾರೆ. ಈ ರಥವನ್ನು ಎಳೆಯುವಾಗ ನಮ್ಮ ನಮ್ಮ ಮನೋರಥಗಳನ್ನು ಎಳೆಯದೆ, ಭಗವತ್ಸಂಕಲ್ಪದ ರಥಕ್ಕೆ ನಮ್ಮನ್ನು ಕೊಟ್ಟುಕೊಳ್ಳಬೇಕೆಂಬ ಉತ್ಸವದ ಮರ್ಮವನ್ನು ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳು ತಿಳಿಸುತ್ತಿದ್ದರು.

ದೇವಾಲಯದಂತೆಯೇ, ರಥವೂ  ನಮ್ಮ ಶರೀರದ  ಪ್ರತಿಕೃತಿಯೇ ಆಗಿದೆ. ಶರೀರವೆಂಬ ರಥದಲ್ಲಿ ವಿರಾಜಿಸುವ ರಥಿ – ಪರಮಪುರುಷ. ಚಕ್ರಗಳು ಪಾದದಂತೆ. ಹೃದಯಸ್ಥಾನದಲ್ಲಿ ದೇವರ ವಿಗ್ರಹಕ್ಕೆ ಮಂಟಪ, ಗೋಪುರದಲ್ಲಿ ಸೋಮ ಸೂರ್ಯಾಗ್ನಿ ಮಂಡಲಗಳು, ಶಿರದ ಉತ್ತುಂಗ ತುಂಗದಲಿ ಪ್ರಣವಾಕ್ಷರವು ವಿರಾಜಿಸುತ್ತದೆ. ಭಗವಂತ ಕರುಣಿಸಿರುವ ಈ ದೇಹರಥವನ್ನು ಭಗವರ್ದ್ರಥ ಮಾಡಿಕೊಳ್ಳಬೇಕ್ಕಾದ್ದು ನಮ್ಮ ಕರ್ತವ್ಯ.

ಸೂಚನೆ: 16/03/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿಯ ಮನೋಲ್ಲಾಸ ಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.