Thursday, December 9, 2021

அவதாரம் (Avataaram)

மூலம்: தாரோடி சுரேஷ் 
தமிழாக்கம்: ஸி. ஆர். ஸ்ரீ தர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ஸ்ரீ ராமன்ஸ்ரீ கிருஷ்ணன்மற்றும் பல மஹாபுருஷர்களை அவதார புருஷர்களென்று வழிபடும் பரம்பரை நம் நாட்டில் உள்ளதுஅவர்களுடைய புண்ணிய கதைகளை திரும்ப திரும்ப கேட்டு பேறுபெற்றவராக    விரும்புவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காததுமொத்தத்தில் அவதாரங்களைப் பற்றிய சிந்தனை நம் நாட்டு மக்களின் வாழ்வில் பிரிக்க இயலாத ஒன்றாகும்.

               ஆனால் அவதாரங்களைப் பற்றிய உண்மையைக் குறித்தே கேள்விகள் எழாமல் இல்லை:

1.     உலகம் முழுவதும் பரந்து நிறைந்துள்ள இறைவனைக் குறித்து அவதாரம் என்பது சரியல்லஅவதாரம் என்றால் இறங்கி வருதல் என்பதாகும்.

2.      அவ்வாறு இறங்கி வந்தால் அவன் முன்பு இருந்த இடம் வெற்றிடமாக மாறி விடுமாஅவன் இல்லாத இடமே இல்லைஅப்படியென்றால் அவன் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இறங்கி வருவது என்பது அர்த்தமற்றது அல்லவாஅப்படியாக இறைவனுக்கு வருவது போவது என்பன இல்லை.

3.     அவதாரம் என்றால் மனிதன் முதலிய பிறப்புகளை மேற்கொள்வதுஆனால் அவ்வாறு கூறுவது பாரதீயரின் சாஸ்திரீயமான சிந்தனைக்கே எதிர்மறையானதுஏனென்றால் பிறப்பு இறப்புகள் என்பன மனிதனின் குறைபாடுகள்அவதாரம் என்பதை ஒப்புக்கொள்வது இறைவனிடம் குறைபாடுகள் உள்ளனவென்று குற்றம் சாட்டியது போன்றதாகும்அது சரியன்று. 'அவிகாராய சுத்தாயஎன்று இறைவனைப்  போற்றுகிறோம்.

4.     ,இறைவன் அனைவருள்ளும் உறையும் அந்தர்யாமிஆகையால்தீயவர்களை அழிக்கவும், அதர்மத்தை ஒழிக்கவும் அவதாரம் செய்துதான் ஆகவேண்டும் என்பதில்லைஇறைவன் உள்உறைந்தவாறே தீயவர்களின் மனதில் மாற்றம்  உண்டாக்க வல்லவன்ஆகையால் அவதாரத்தின் தேவையே இல்லையல்லவா?

5.     அத்தகைய மேம்பட்ட மஹான்களை நாம் பின்பற்ற ஏற்றவற்களாகக் கருதி கௌரவித்து, அவர்கள் வழியைக் கடைபிடித்தால் போதுமானதாகாதா என்பது சிலருடைய வாதம்.

      ஆனால் இறைவனின் தன்மையை அளப்பதற்குநம் புலன்களுக்கு அப்பாற்பட்ட பார்வை தேவை என்பது ரிஷிகளின் அனுபவத்தால் கண்டறியப்பட்ட உண்மை. 'த்ருச்யதே ஞான சக்ஷுர்பிதபச்சக்ஷுர்பிரேவச……….

மேலும் நேரடியான அனுபவம்யுக்திவாதம் மற்றும் அனுபவித்தவர்களின் வாயிலாகவந்த விவரம்  முதலியவற்றை   ஆதாரமாகக்கொண்டே  நாம் சாதாரணமாக உண்மையை அறிந்துகொள்கிறோம்.

           அவதாரத்தின் விஷயத்தில் ஞானிகளின் அனுபவபூர்வமான கூற்றுஅவ்வனுபவத்தை சார்ந்த யுக்திஇவ்விரண்டையும் ஆதாரமாகக் கொண்ட சான்றோற்களின் உண்மைக் கூற்றுகளையும் நம் நாட்டின் பண்டைய நூல்களில் ஏராளமாக காணலாம்மற்றும் வெவ்வேறு காலகட்டங்களிலும், தேசங்களிலும் அவதார புருஷர்களின் தரிசனத்த்தின்  அனுபவங்கள் சாதனையாளர்களிடம் கண்டதாக இதிஹாஸங்கள் கூறுவது உண்டு.

            இந்த பின்னணியில் மேறக்கூறிய கேள்விகளுக்கு உரிய விடைகளைக் காண முயல்வோம் இறைவனுக்கு பாரமார்த்திகமாக ஏறுதல் இறங்குதல் ஏதும் கிடையாதுஅவன் எப்பொழுதும் எங்கும் நிறைந்த முழுமையானவன்கர்மவசத்தால் ஏற்படும் பிறப்பும் அவனுக்கு உண்மையில் கிடையாதுஅவனுடைய அவதாரம் என்று கூறுவது ஒரு வித மேலோட்டமான பொருள்.   அவன் தன்னுடைய நிச்சயத்திற்கு ஏற்பஎப்பொழுது இங்குள்ள ஜீவிகளுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறானோ அப்பொழுது அது அவனுடைய 'அவதாரம்' என்று அழைக்கப்படுகிறதுஇவ்வாறு இறைவனுடைய அவதாரம் தன்னுடையதேயான   வெளிப்படுத்தலேயன்றி உண்மையில் இறங்குவதல்லஆகையால் 'அவதாரம்' என்பதனால் அவனுடைய முழுமையான தன்மைக்கும்பரந்து இருக்கும் தன்மைக்கும் எவ்வித குறைபாடும் இல்லை.

                  பிறப்பு-இறப்புகளை குறைபாடுகள் என்று கூறும் சாஸ்திரங்கள் இறைவனை அஜாயமானோ பஹுதா விஜாயதே – என்றால் 'பிறப்பு என்பது இல்லாமலே பிறக்கிறான்'  என்று கூறுகின்றனஎன்றால் அவன் தன் ஸங்கல்பத்திற்கேற்ப தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறானேயன்றி பல ஜன்மங்களின் கர்மங்களின் காரணத்தினால் அல்லஆகையால் குறைபாடுகள் என்பது அவனுக்கு பொருந்தாது.

                            அந்தர்யாமியாக இருந்து தன்னுடைய ஸங்கல்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுதல்எல்லாம்வல்ல இறைவனால்  முடியாததல்ல. அவ்வாறே பக்தர்களின் உள் மற்றும் வெளிக் கண்களுக்கு காட்சியளித்து, கண்களுக்கு விருந்தாகி,  பரமானந்தத்திற்கு காரணமாகி அவர்களுக்கு உயர்ந்த நிலையை அளிக்கும் சுதந்திரம் அவனுக்கு இல்லையா?

                   அவதாரபுருஷர்கள் உபாசகர்களின் தியானத்திற்கு உரியவர்களாக விளங்கி போகத்தையும், மோக்ஷத்தையும்  அளிக்கும் வல்லமை படைத்தவர்களாயிருப்பர்அவதாரத்திற்கு முன்பும்அவதார காலத்திலும்அவதாரத்தை முடித்துக்கொண்ட  பின்னரும் அவர்களுடைய சக்தியின் பெருமை ஒரே அளவிலிருக்கும்ஆனால் அதுவே ஒரு ஜீவி தன் சாதனையால் சித்திகளை அடைந்தால் அந்த அளவிலான சாமர்த்தியம் இராதுமற்றும்  சிறந்த முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய  நாயகனான ஒருவனை எவராவது கடைப்பிடித்தால்அவர்கள் கேவலம் அறத்தின் வழி மட்டும்தான்  நடக்கலாம்.

                 இவ்வாறாகஅவதாரத்தைப் பற்றிய கருத்துக்கள், புலன்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம்பெற்ற ஞானியர்களால்    பாரதீயரின் வாழ்க்கையை முற்றிலும் சூழ்ந்துள்ளது.


குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.