Showing posts with label 244_ayvmarticle. Show all posts
Showing posts with label 244_ayvmarticle. Show all posts

Thursday, April 16, 2020

வெகு தொலைவில் இருந்தாலும் மிக அருகில் (Veku Tolaivil Iruntalum Mika Arukil)

மூலம்: மைதிலி
தமிழாக்கம்: ஜானகி
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)


கர்க சம்ஹிதையில் ஓர் சம்பவம். ஸ்ரீ க்ருஷ்ணன் கோகுலத்தை அலங்கரித்த காலத்தில்  அனைத்து கோபிகைகளும் க்ருஷ்ண த்யானத்தில் திளைத்திருந்தனர். அதிலும் ராதை அவனிடம் ஒன்றிய மனத்துடன் முழுமையாக தன் மனதை கண்ணனுக்கே அர்பணித்து வாழ்ந்தவள். அவளை குறித்து கண்ணனும் மிகவும் மகிழ்ந்து தானும் எந்நேரமும் அவளை நினைவில் கொண்டிருந்தான்.

கண்ணன் பிற்காலத்தில் உடலளவில் அவளிடமிருந்து விலகி சென்றாலும் தன் பணிகளனைத்தையும் அவனுக்கே அர்பணித்து மனத்தளவில் எந்நேரமும் அவனுடனேயே வாழ்ந்தாள். அவளைக் குறித்து மிகவும் மகிழ்ந்த கண்ணன் தன் பத்தினிமார்களிடம் ராதையை புகழ்ந்த வண்ணமிருந்தான். இதை செவியுற்ற அவன் மனைவியர் கண்ணனின் புகழ்ச்சிக்குறிய ராதையை எவ்வாறேனும் ஒருமுறையாவது காண வேண்டும் என ஆர்வம் கொண்டனர். கூடவே தங்களின் க்ருஷ்ண பக்தியும் எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல எனும் எண்ணம் ரகசியமாக உள்ளத்தில் உண்டாயிற்று.

பல நாட்களுக்கு பிறகு ஓர் சூர்யக்ரஹண சமயத்தில் தன் பரிவாரத்துடன்  கண்ணன் கோப-கோபியரை சித்தாஸ்ரமம் எனும் இடத்தில் காண சந்தர்ப்பம் வாய்த்தது. கண்ணன் தன் பத்தினியருக்கு ராதையை அறிமுகம் செய்வித்தான். அவர்கள் நெடு நேரம் அவளுடன் அளவளாவினர். எந்நேரமும்  கண்ணனிடமே நிலைத்திருந்த  மனநிலை உள்ள ராதையை கண்டு அவர்களுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது.

இரவில் அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர். தன்அறைக்கு வந்த ருக்மிணி கண்ணன் இன்னும் உறங்காததற்கு காரணத்தை வினவினாள். "ராதைக்கு தினமும் பால் அருந்திய பின்னர் உறங்கும் பழக்கம். இன்று அவளுக்கு யாரும் பால் தராததால் உறங்கவில்லை. ஆகையால் எனக்கும் உறக்கமில்லை" என்றான் கண்ணன்.

உடனே ருக்மிணி முதலானோர் ராதைக்கு பால் கொடுத்து திரும்பினர். கண்ணன் இப்போது சயனித்திருந்ததை கண்ட  ருக்மிணி அவனுக்கு பாதசேவை புரியும் போது "சுவாமி தங்கள் பாதங்களில் கொப்புளங்கள் உள்ளனவே" என பதறினாள்." ராதைக்கு மிகவும் சூடான பாலை நீங்கள் அருந்த செய்தீர்கள். அவள் தன் இதயத்தில் எந்நேரமும் என் பாதங்களை சுமந்தவள். கொப்புளங்கள் அந்த பாலின் வெப்பத்தின் விளைவு தான்" என்றான் கண்ணன்.

உடலளவில் தொலைவில் இருப்பினும் மனத்தளவில் மிக அருகில் அவனிடமே ஒன்றிய மனத்தவளான  ராதையின்  மகத்தான பக்தி ருக்மிணியின் மனத்தை தொட்டது. கண்ணனின் ராதையை குறித்த புகழ்ச்சி வீணல்ல என்பதை உணர்ந்து முழுமனத்துடன் அவளை மனதார வணங்கினாள்.

பக்தியுடன் அழைத்தால் இறைவன் என்றும் தொலைவில் இல்லை. புரந்தர தாசரின் பாடலை நினைவு கூறலாம்: "எங்கிருக்கிறானோ ரங்கன் எனும் சந்தேகம் வேண்டாம். எங்கு பக்தர்கள் அழைத்தால் அங்கேயே உள்ளான்." அவனுக்கு கேட்கும் வகையில் அழைக்கும் முறையை அறிய வேண்டும். அவ்வளவே. எங்கும் உறைபவன் ஆதலால் அழைக்க உரத்த குரல் தேவையில்லை, அவனில் லயிக்கும் மனமே தேவையானது என்பதை தெளிவு படுத்தினான் கண்ணன்.

எந்நேரமும் இறைவனின் சிந்தனையுடன செய்யும் பணிகளை அவனுக்கே அர்பணித்து அதன் பலனையும் இறைவனின் பிரசாதமாக ஏற்பது அவனிடமே நம்மை கொண்டு சேர்க்கும் என்பது ஸ்ரீரங்க மஹாகுரு அவர்களின் அறிவுரை. கர்ம யோகத்தின் மர்மம்.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.      

Tuesday, January 14, 2020

ದೂರದಲ್ಲಿದ್ದರೂ ಅತಿಸಮೀಪ (Dooradalliddaru athisameepa)

ಲೇಖಕರು:  ಮೈಥಿಲೀ ರಾಘವನ್
(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)



ಗರ್ಗಸಂಹಿತೆಯಲ್ಲಿನ ಪ್ರಸಂಗವೊಂದು. ಶ್ರೀಕೃಷ್ಣನು ನಂದಗೋಕುಲದಲ್ಲಿ ಸಾನ್ನಿಧ್ಯವನ್ನನುಗ್ರಹಿಸಿದ ಕಾಲದಲ್ಲಿ ಗೋಪಸ್ತ್ರೀಯರೆಲ್ಲರೂ ಸದಾ ಕೃಷ್ಣಧ್ಯಾನ ಪರಾಯಣರಾಗಿದ್ದರು. ಅದರಲ್ಲೂ ರಾಧೆಯು ತನ್ನ ಮನಸ್ಸನ್ನು ಪೂರ್ಣವಾಗಿ ಕೃಷ್ಣನಿಗೇ ಅರ್ಪಿಸಿ ತದೇಕಚಿತ್ತಳಾಗಿದ್ದವಳು. ಆಕೆಯ ವಿಷಯದಲ್ಲಿ ಕೃಷ್ಣನೂ ಸಹ ಅತ್ಯಂತ ಪ್ರಸನ್ನನಾಗಿದ್ದು ತಾನೂ ಸದಾ ಆಕೆಯನ್ನು ಸ್ಮರಿಸುತ್ತಲಿದ್ದ.

ಶ್ರೀಕೃಷ್ಣ ಮುಂದೆ ಭೌತಿಕವಾಗಿ ಅವಳಿಂದ ದೂರವಾದಾಗಲೂ ತನ್ನ ಕರ್ಮಗಳೆಲ್ಲವನ್ನೂ ಆತನಿಗೇ ಸಮರ್ಪಿಸುತ್ತ ಮಾನಸಿಕವಾಗಿ ಅವನ ಸಾನ್ನಿಧ್ಯದಲ್ಲೇ ಇರುತ್ತಿದ್ದಳು. ಆಕೆಯ ವಿಷಯದಲ್ಲಿ ಅತಿಪ್ರಸನ್ನನಾದ ಕೃಷ್ಣನು ತನ್ನ ಪತ್ನಿಯರ ಮುಂದೆ ಸದಾ  ಆಕೆಯನ್ನು ಪ್ರಶಂಸೆ ಮಾಡುತ್ತಲಿದ್ದ.  ಇದನ್ನು ಕೇಳುತ್ತಿದ್ದ ಆತನ ಮಹಿಷಿಯರಿಗೆ ಕೃಷ್ಣನ ಮೆಚ್ಚುಗೆಗೆ ಪಾತ್ರಳಾದ ರಾಧೆಯನ್ನು ಒಮ್ಮೆಯಾದರೂ ಭೇಟಿಯಾಗಲೇಬೇಕೆಂಬ ಕುತೂಹಲ ಉಕ್ಕಿಬರುತ್ತಿತ್ತು. ಜೊತೆಗೆ ತಮ್ಮ  ಕೃಷ್ಣಭಕ್ತಿಯೇನೂ ಕಡಿಮೆಯಲ್ಲ ಎಂಬ ಭಾವನೆ ರಹಸ್ಯವಾಗಿ ಅವರಲ್ಲಾಡಿತು.

ಬಹಳ ಕಾಲದ ನಂತರ ಒಮ್ಮೆ ಸೂರ್ಯಗ್ರಹಣಸಮಯದಲ್ಲಿ ಸಪರಿವಾರನಾಗಿ  ಕೃಷ್ಣನು ಗೋಪಗೋಪಿಯರನ್ನು ಸಿದ್ಧಾಶ್ರಮವೆಂಬ ಜಾಗದಲ್ಲಿ ಭೇಟಿಯಾಗುವ ಸನ್ನಿವೇಶ ಕೂಡಿಬಂದಿತು. ಕೃಷ್ಣ ತನ್ನ ಮಹಿಷಿಯರಿಗೆ ರಾಧೆಯನ್ನು ಪರಿಚಯಿಸಿದ. ಅವರೆಲ್ಲರೂ ಅತಿ ಉತ್ಸಾಹದಿಂದ ದೀರ್ಘಕಾಲ ಆಕೆಯನ್ನು ಮಾತನಾಡಿಸುತ್ತ ಕಳೆದರು. ರಾಧೆಯು ಕೃಷ್ಣಭಾವಭರಿತಳಾಗಿಯೇ ಸದಾಕಾಲವೂ ಇದ್ದದ್ದನ್ನು ಕಂಡು ಆಶ್ಚರ್ಯ-ಸಂತೋಷಗಳೆರಡೂ ಮೂಡಿ ಬಂದಿತು ಕೃಷ್ಣಪತ್ನಿಯರಿಗೆ.  

ರಾತ್ರಿವೇಳೆಗೆ ಎಲ್ಲರೂ ಅವರವರ ವಿಶ್ರಾಂತಿಧಾಮಕ್ಕೆ ಹಿಂತಿರುಗಿದರು. ತನ್ನ ಕೊಠಡಿಗೆ ಬಂದ ರುಕ್ಮಿಣಿದೇವಿಯು ಕೃಷ್ಣನು ಮಲಗದೇ ಕುಳಿತೇಯಿರುವುದನ್ನು ನೋಡಿ ಏಕೆ ಇಷ್ಟು ತಡವಾದರೂ ನಿದ್ರಿಸಲಿಲ್ಲವೆಂದು ಪ್ರಶ್ನಿಸಿದಳು. ಕೃಷ್ಣನೆಂದ “ರಾಧೆಗೆ ರಾತ್ರಿ ಹಾಲು ಕುಡಿದು ಮಲಗುವ ಅಭ್ಯಾಸ. ಇಂದು ಅವಳಿಗೆ ಯಾರೂ ಹಾಲು ಕೊಟ್ಟಿಲ್ಲವಾದ್ದರಿಂದ ನಿದ್ದೆ ಬರುತ್ತಿಲ್ಲ. ಹಾಗಾಗಿ ನನಗೂ ನಿದ್ರೆಯಿಲ್ಲ”

ಒಡನೆಯೇ ರುಕ್ಮಿಣೀ ಮುಂತಾದವರು ರಾಧೆಗೆ ಕುಡಿಯಲು ಹಾಲು ಕೊಟ್ಟುಬಂದರು. ಶ್ರೀಕೃಷ್ಣನೀಗ ಪವಡಿಸಿದ್ದ. ಆತನ ಪಾದಸೇವೆಯನ್ನು ಮಾಡಲು ಉದ್ಯುಕ್ತಳಾದ ರುಕ್ಮಿಣಿಯು “ಸ್ವಾಮೀ. ಏನಿದು ನಿಮ್ಮ ಪಾದಗಳಲ್ಲಿ ಬೊಬ್ಬೆಗಳು  ಏಕೆ ಎದ್ದಿವೆ” ಎಂದು ಗಾಬರಿಯಿಂದ ಕೇಳಿದಳು. ಕೃಷ್ಣನು “ರಾಧೆಗೆ ಅತಿಬಿಸಿಯಾದ ಹಾಲನ್ನು ಕುಡೀಸಿದ್ದೀರಿ. ಆಕೆಯು ನನ್ನ ಪಾದಗಳನ್ನು ತನ್ನ ಹೃದಯದಲ್ಲಿ ಸದಾ ಧರಿಸಿರುವ ಕಾರಣ ಹಾಲಿನ ಬಿಸಿ ನನ್ನ ಪಾದಗಳ ಮೇಲೆ ಪರಿಣಾಮಬೀರಿದೆ” ಎಂದ.

ಭೌತಿಕವಾಗಿ ದೂರದಲ್ಲಿದ್ದರೂ ಮಾನಸಿಕವಾಗಿ ಅವನಲ್ಲೇ ತನ್ಮಯಳಾಗಿರುವ ರಾಧೆಯ ಭಕ್ತಿಯಪರಾಕಾಷ್ಠೆ ರುಕ್ಮಿಣಿಯ ಮನಮುಟ್ಟಿತು. ಕೃಷ್ಣನು ಮಾಡಿದ ರಾಧೆಯ ಪ್ರಶಂಸೆ ವ್ಯರ್ಥವಲ್ಲವೆಂಬುದು ಸಿದ್ಧವಾಗಿ ತುಂಬುಹೃದಯದಿಂದ ರಾಧೆಗೆ ಮಾನಸಿಕವಾಗಿ ಅಭಿನಂದನೆಗಳನ್ನು ಸಲ್ಲಿಸಿದಳು.

ಭಕ್ತಿಯಿಂದ ಕರೆದರೆ ಭಗವಂತ ಎಂದಿಗೂ ದೂರವಲ್ಲ. ದಾಸರಪದವೊಂದು ಇಲ್ಲಿ ಸ್ಮರಣೀಯ: ”ಎಲ್ಲಿರುವನೋರಂಗ ಎಂಬ ಸಂಶಯ ಬೇಡ. ಎಲ್ಲಿ ಭಕ್ತರು ಕರೆದರಲ್ಲೆ ಒದಗುವನೋ”. ಅವನಿಗೆ ಕೇಳುವಂತೆ ಕೂಗುವ ಕ್ರಮವರಿಯಬೇಕಷ್ಟೆ. ಆತನು ಸರ್ವಾಂತರ್ಯಾಮಿಯಾದ್ದರಿಂದ ಕೂಗಿಗೆ ಬೇಕಾದದ್ದು ಗಟ್ಟಿಯಾದ ಧ್ವನಿಯಲ್ಲ, ಅವನಲ್ಲಿ ರಮಿಸುವ ಮನವೇ ಎಂಬುದನ್ನು ಮನವರಿಕೆಮಾಡಿಸಿದ್ದಾನೆ ಶ್ರೀಕೃಷ್ಣ.

ನಿರಂತರ ಭಗತ್ಸ್ಮರಣೆಯೊಂದಿಗೆ ಭಗವತ್ಸಮ್ಮತವಾದ ಕರ್ಮಗಳನ್ನಾಚರಿಸಿ ಅದರ ಫಲವನ್ನೂ ಭಗವತ್ಪ್ರಸಾದವಾಗಿ ಭೋಗಿಸುವುದು ಭಗವಂತನೆಡೆಗೇ ನಮ್ಮನ್ನೊಯ್ಯುತದೆ ಎಂಬುದು ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುವಿನ ಆದೇಶ, ಕರ್ಮಯೋಗದ ಮರ್ಮ.

ಸೂಚನೆ:  13/01/2020 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿಯ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.