Showing posts with label 632_ayvmarticle. Show all posts
Showing posts with label 632_ayvmarticle. Show all posts

Thursday, September 16, 2021

ஞானிகள் தந்த அடையாளங்கள் (Jnanigal Tanda Adaiyalangal)

மூலம்: டா.மோஹன்  ராகவன்
தமிழாக்கம்: ஸி. ஆர்.  ஸ்ரீதர்
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)



ராமப்பாசாரி ப்ரசித்தி பெற்ற சிற்பக் கலைஞர்களின் பரம்பரையில் பிறந்த கைதேர்ந்த சிற்பி. ஆனால் அவனுடைய கலைக்கும், அறிவாற்றலுக்கும் உரிய புகழும், பரிசுகளும் கிடைக்கவில்லை. ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்தான். அந்நாட்டின் அரசர் ஒரு முறை   அயல் நாடுகள் மீது படையெடுத்து வெற்றியுடன் திரும்பினார். அதனால் நன்றியுணர்ச்சியுடன்,  தன் நாட்டின் தலைநகரத்தில் ஒரு பெரிய ஆலயத்தை  நிர்மிக்க 
நிச்சயித்தார்.  அதற்காக, மிகவும் பிரபலமான சிற்பிகளைத்  தேட வேண்டுமென்று  ஒரு போட்டியை நிறுவினார். மிக மிக  அழகுள்ளதாகவும் ஆலய சிற்பக் கலையடங்கியதாகவும் உள்ள விஷ்ணுவின் சிலையை வடிப்பவருக்கு  ஆலயத்தின் மாபெரும் வேலையின் தலைமைப் பொறுப்பை  வழங்குவதாக அறிவிப்பு விடுத்தார். இதைக் கேட்டு  ராமப்பனுக்கு  மிக்க சந்தோஷமும் உற்சாகமும் உண்டாயின. சிற்பம் செதுக்கும் வேலையை உடனே  ஆரம்பித்தான். இரவும் பகலும் உழைத்து, பக்தி சிரத்தையுடன்  தன் இஷ்ட தெய்வமான  நான்கு திருக் கைகளுடன்  கூடிய விஷ்ணுவின் சிற்பத்தை செதுக்க ஆரம்பித்தான். அதே ஊரில் வாழ்ந்த  மாதாசாரியும் 

அம்மாபெரும் போட்டியில் பங்கேற்க தயாரானான். சில மாதங்கள் சென்ற பின் இருவரும்  தத்தம் சிலைகளை தலைநகரத்தில்  காட்சிப் பொருளாக்கினார்கள். மற்றும் பல போட்டியாளர்கள் இருந்தாலும் இவ்விருவருடைய சிற்பங்களின் அழகு எடுப்பாயிருந்ததால் அரசர் மற்றும் குலகுருக்களின் மனதை ஈர்த்தன. குலகுருக்களோடு ஆலோசித்த அரசர், இவ்விருவரின் சிற்பங்களை தலைநகரின் முக்கியமான நாற்சந்தியில்  காட்சிப் பொருளாக வைக்குமாறு  கட்டளையிட்டார். அனைத்து நகரவாசிகள் மற்றும் பெரியவர்களின் கருத்துகளையும் அறிந்துகொண்டு போட்டியின் முடிவை வெளியிடுவதாக அறிவித்தார். மறுநாள் ராமப்பன்,  மாதப்பன், மற்றும் மற்ற சிற்பிகள்யாருடைய சிற்பம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது  என்று அறியும் ஆவலுடனும் உற்சாகத்துடனும் ராஜ பாட்டைக்குச் சென்றார்கள். அங்கு விமரிசையாக இவ்விருவரின் சிலைகள் உயரமான இடத்தில் அமர்த்தப்பட்டிருந்தன. இருவருடைய ஆனந்தமும் உச்ச கட்டத்தை  அடைந்தது. ஆனால் அருகில் சென்று பார்த்தபொழுது  அவர்களின் இதயம் நொறுங்கும் காட்சி! அவர்களுடைய அற்புதமான சிலைகளுக்கு அடியில் ஆஸ்தான சிற்பியின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த  ஆஸ்தான சிற்பி குதர்க்கமான வினயத்துடன் மக்களின் புகழ்ச்சியையும் வணக்கங்களையும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டிருந்தார்.  இது  ஆஸ்தான சிற்பியின் சூழ்ச்சி என்று இவர்கள் அறிந்தனர். ராமப்பன் ஆச்சரியமடைந்தாலும், எவ்வித ஒட்டுதலுமில்லாமல் கண்களில் நீர் வழிய  அருகிலிருந்த  ஒரு துளசி தளத்தை பக்தியுடன் தன் விஷ்ணு சிலையின் திருவடிக்கு அர்ப்பணித்து விடை கொடுத்து அங்கிருந்து நடந்துவிட்டான். இருவரும் இரவு ஒரு மடத்தில் தங்கி மறுநாள் தங்கள் கிராமத்திற்கு திரும்ப நிச்சயித்தார்கள். ஆனால் மாதப்பனின் மனதில் கோபத்தின் சூறாவளி வீசிக்கொண்டிருந்தது. கபடமான ஆஸ்தான சிற்பிக்கு பாடம் கற்பிக்கவேண்டுமென்று  தீர்மானித்தான். இரவின் இருளில்  ராஜவீதியில் வைக்கப்பட்டிருந்த  சிலைகளை  நெருங்கினான். உளியினால் அடித்து அந்த சிற்பங்களின் நீண்ட மூக்குகளை விகாரப்படுத்திவிட்டு  யாரும் அறியாவண்ணம் திரும்பி விட்டான். மறுநாள் விடியும் பொழுதே ராமப்பன் தன் கிராமத்திற்கு சென்றான். ஆனால் மாதப்பன் சிற்ப கண்காட்சிக்கருகில் சென்று மக்கள் கூட்டத்திற்கு இடையில் நின்றான். அரசர் போட்டியின் தீர்ப்பை அறிவிக்க வந்தார். அரசரின் தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அரசரின்  சேவகர்கள் ராமப்பனை பல்லக்கில் அமர்த்தி அழைத்து வந்தனர். அவனுக்கு பரிசளித்து ஆலயம் கட்டும் பணிக்கு அவனை முக்கிய சிற்பியாக நியமித்து, ஆஸ்தான சிற்பிக்கு வேலையிலிருந்து ஓய்வளிக்கப்பட்டது. மாதப்பனை எச்சரித்து அனுப்பினார்கள். ஆச்சரியம் என்னவென்றால் சிற்பங்களின் கீழ் ஆஸ்தான சிற்பியின் பெயரை பொறிக்கவைத்ததும் அரசரே என்பது தெரிய  வந்தது. ராஜகுருக்களோடு ஆலோசனை நடத்தி ஏற்படுத்திய, நேர்மை மற்றும் பக்தியின் பரீட்சையாய் அது இருந்தது. இப்பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ராமப்பனோவெனில் தன் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தான்! 
                 
சிற்பக் கலை பாரதத்தின் மிக அற்புதமான கலைகளில் ஒன்றாகும். சிற்பம் வடிக்கும் திறமை பல தேசங்களில் கண்டுவந்தாலும், பாரதத்தில் இந்த சிற்ப சாஸ்திரம் வளர்ந்து வந்த  பின்னணி, காரணம் மற்றும் மனோதர்மம் மிக  விசேஷமானவையாகும். சிற்பியை சிருஷ்டிக்கு மூல கர்த்தாவான பிரமனுக்கு ஒப்பிட்டிருக்கின்றனர். தேவசிற்பியின் பெயரே 'விச்வகர்மா'. சிற்பியானவன் பிரமனைப் போல் கல்லின் மீதோ அல்லது மரத்தின் மீதோ தன்னுடையதே ஆன ஒரு உலகை படைக்க வல்லவன். ஆனால்  அவன் உருவாக்கும் உலகம் எது? இங்கு 'சிற்பம் என்னும் சொல்லே  'ஸமாதி' என்னும் அர்த்தத்தை பறை சாற்றுகின்றது. ரிஷிகளும், ஞானிகளும் தமக்குள்ளே கண்ட தேவர்களின் உருவங்களை அவ்வாறே சிற்பங்களில் காணுமாறு செய்தால்,  அந்த சிற்பிகள், ஞானிகளின் ஸமாதி ஸாம்ராஜ்யத்தையும், இறை உலகத்தின் விஷயங்களையும் இவ்வுலகில் படைத்த விச்வகர்மாவாகின்றான். சிற்பியின் இந்த படைப்பு வேலை  நடக்க வேண்டுமென்றால் விதி முறைகளின் கட்டுப்பாடு தேவை. பிரம்மாவிற்கும்  விதி முறைகள் இல்லாமல் இல்லை. அகில உலகின் தாய் தந்தையர்களாகிய லக்ஷ்மீ-நாராயணர்களின்  ஆணைப்படி பணி புரிய வேண்டும். 
    
இத்தகைய விதி முறைகள் யாரோ ஒருவருடைய  விருப்பு வெறுப்புகளின் பட்டியல் அல்ல. இவை  பிரமனுடைய படைப்பில் இயற்கையாகவே உள்ளவையாகும். படைப்பு ஆக வேண்டுமென்றால் விதை, முளை, மரம், கிளை, பூ, காய், பழம் முதலிய வெவ்வேறு படிகளை அடைந்து, பழத்திற்குள் ஆரம்பத்தில் இருந்த விதையே மறுபடியும் காணப்படுகிறது. அவ்வாறே ஒரு சிற்பத்தின் விதையானது ஞானிகளின் த்யான ஸாம்ராஜ்யத்தில் உள்ளது. அது முளை விடுவது சிற்பியின் அமுதமென்னும் கைகளினால். உள் தரிசனத்தின் தேவதா உருவங்களின் லட்சணங்கள், முகத்தின் பாவனைகள் அவ்வாறே கல்லில் பதிவாக வேண்டும். அதாவது முளை மரமாகி வளர்ந்து உள் அனுபவத்தின்  பிம்பமாக தேவதா மூர்த்தியின் உருவத்தைப் பெறுகிறது. தெய்வச் சிலையின் அளவுகள், அவைகள் நிற்கும் தன்மை, அங்க வளைவுகள், ஆழமான பார்வை,  கையில் உள்ள ஆயுதங்கள்,  இவை எல்லாம் தரிசிப்பவர்களுடைய மனதை உள் நோக்கி ஈர்க்கும் சாதனங்கள் ஆகின்றன. விளக்கொளியில் அதன் தரிசனம், சங்கு, மணி முதலியவைகளின் ஒலி, துளசி மற்றும் நல்ல மணமுள்ள பூக்களின்  நறுமணம் நம் இதயத்தில் இனிமையையும், குளிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. ஞானிகளின் இதயத்திலிருந்து முளைத்த அனுபவமென்னும் விதையிலிருந்து வளர்ந்த மரத்தின் பலன் என்னவென்றால், பக்தர்களின் இதயத்தில் உண்டாகும் குளிர்ச்சி. இவ்வளவும் நடந்து முடிந்தால் ஒரு வட்டம் முழுமையடைந்தது போன்றதாகும். 
           
 இவ்வட்டம் முழுமையடைய வேண்டுமென்றால், சிற்பத்திற்கு  அதற்கு  தகுந்த மனோதர்மம் இருக்க  வேண்டும். மேற்கூறிய கதையில் ராஜகுருவின் தலைமையில்  அரசர் பரம ஆனந்த அனுபவமான விதையின் விவசாயத்தையே செய்துகொண்டிருந்தார். தேவதைகளின் உருவங்கள் சரியான பிரதி பிம்பங்களாக வேண்டுமென்றால் கலைத் திறன் கண்டிப்பாக மிகவும் அவசியம். ஆனால் பயிரை விளைபவன் களையையும் சேர்த்து விளைந்தால் அது அபாயகரமாகிவிடும். காமம், க்ரோதம், பொறாமை, புகழின் மேல் விருப்பம் முதலியவை கலையின் வளர்ச்சிக்கு தடையான களைகள். ஆஸ்தான சிற்பிக்கு சிலைகளுக்கு அடியில் தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைப்  பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டாலும், சிறிதும் தயக்கமில்லாமல் மக்களின் கர ஒலியை ஏற்று மகிழ்ந்தான். இது ஒரு கோணத்தில் திருட்டுத் தனமேயாகும். இத்தகைய செயல்கள் ரிஷிகளின் மன நிலைக்கு எதிரானவை. மாதப்பனோ  பொறாமைக்கு  வசப்பட்டு  தன்னுடையதேயான படைப்பை நாசம் செய்ய தயாரானான். மாதப்பன் செதுக்கிய சிலை  ஞானிகளின் இதயத்தில்  தோன்றிய சிற்பமல்ல. அது அவனுடைய புகழாசைக்கு ஒரு கருவியாயிருந்தது. ஆகவே தான் , தனக்குப் புகழ் கிட்டாது என்று அறிந்த பொழுது அந்த சிலை அவனுக்கு வெறும் கல்லைப் போல் காட்சியளித்தது. ஆனால் ராமப்பனுக்கு அந்த சிலை பவித்திரமான தேவதையின் உண்மையான தோற்றமே ஆகியிருந்தது. அவனுக்கு அநியாயம் ஏற்பட்டபோதிலும்  அச்சிலையின் தெய்வத்தன்மை அவன் கண்களிலிருந்து மறையவில்லை.  அதை அவன் என்றும் கல்லாக உணரவில்லை. தன் முன்னோரிடமிருந்து தான் கற்ற கலையின் பயனால் படைத்த தன் இஷ்ட தெய்வம் என்றே உணர்ந்தான். ஒரு துளசி தளத்தை சமர்ப்பித்து  தன் இஷ்ட தெய்வத்திற்கும், தன் முன்னோர்களுக்கும், விச்வகர்மாவிற்கும், பிரமனுக்கும் சேர வேண்டிய காணிக்கையை அளித்து விட்டான். சாந்திக்கும் நிம்மதிக்கும் வீடாக  அமைய வேண்டிய சிலையை வடிப்பதற்கு   அன்பு, பக்தி, மன நிம்மதி இவற்றினாலேயே சாத்தியம்.             

தேவதைகளின் விக்ரஹங்களைப்  பார்க்கும் முறையைப் பற்றி ஸ்ரீரங்கமஹாகுருவின் கருத்து இவ்வாறிருந்தது:-  ஞானிகள் ஆத்ம யோகத்தில் கண்ட ஸத்தியத்தை  சிலா யோகத்தில் சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் பொம்மைகளை வைத்துக்கொண்டு  விளையாடும்பொழுது, அவைகளின் பொம்மை உருவத்தை மறந்து, 'இது தாய், இது குழந்தை' என்றே  நினைத்துக்கொள்கின்றன. தேவதைகளின் சிலைகள், ஞானிகள் நமக்காக  விட்டுச் சென்ற  பொம்மைகள் போன்றனவாம். இவைகளை வைத்துக்கொண்டு விளையாடும்போதெல்லாம்  அதன் பின்னணியில் உள்ள  அழியாத்தன்மை நம் இதயங்களில், மனங்களிலும் நிறைந்திருக்க வேண்டும். 

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Thursday, July 8, 2021

ಜ್ಞಾನಿಗಳು ಕೊಟ್ಟ ಅಭಿಜ್ಞಾನಗಳು (Jnaanigalu Kotta Abhijnaanagalu)

ಲೇಖಕರು: ಮೋಹನ ರಾಘವನ್.

(ಪ್ರತಿಕ್ರಿಯಿಸಿರಿ lekhana@ayvm.in)




ರಾಮಪ್ಪಾಚಾರಿ ಹೆಸರಾಂತ ಸ್ಥಪತಿಗಳ ವಂಶದಲ್ಲಿ ಹುಟ್ಟಿದ ಕುಶಲ ಶಿಲ್ಪಿಯಾಗಿದ್ದ. ಆದರೆ ಅವನ ಕಲೆ-ಪ್ರತಿಭೆಗಳಿಗೆ ತಕ್ಕ ಕೀರ್ತಿ-ಪುರಸ್ಕಾರಗಳು ದೊರಕಿರಲಿಲ್ಲ. ಬಡತನದಲ್ಲಿ ನರಳುತ್ತಿದ್ದ. ದೇಶದ ರಾಜರೊಮ್ಮೆ ದಿಗ್ವಿಜಯದಿಂದ ಯಶಸ್ವಿಯಾಗಿ ಹಿಂತಿರುಗಿ  ಕೃತಜ್ಞತಾಭಾವದಿಂದ ರಾಜಧಾನಿಯಲ್ಲಿ ದೊಡ್ಡ ಆಲಯವೊಂದನ್ನು ಕಟ್ಟುವುದಾಗಿ ನಿಶ್ಚಯಿಸಿದರು. ಈ ಕಾರ್ಯಕ್ಕಾಗಿ ಅತ್ಯಂತ ಪ್ರತಿಭಾವಂತ ಸ್ಥಪತಿಗಳನ್ನು ಹುಡುಕಬೇಕೆಂದು ಸ್ಪರ್ಧೆಯನ್ನು ಆಯೋಜಿಸಿದರು. ಅತ್ಯಂತ ಸುಂದರವೂ ಆಗಮೋಕ್ತವೂ ಆದ ವಿಷ್ಣುಮೂರ್ತಿಯನ್ನು ನಿರ್ಮಿಸುವವರಿಗೆ ದೇವಾಲಯದ ಬೃಹತ್ಕಾರ್ಯದ ಮುಖಂಡತ್ವವನ್ನು ವಹಿಸುವುದಾಗಿ ಘೋಷಣೆ ಮಾಡಿಸಿದರು. ಇದನ್ನು ಕೇಳಿ  ರಾಮಪ್ಪನಲ್ಲಿ  ಬಹಳ ಸಂತೋಷ-ಉತ್ಸಾಹಗಳು ತುಂಬಿದವು. ಕೆತ್ತನೆಯ ಕಾರ್ಯವನ್ನು ತಕ್ಷಣವೇ ಪ್ರಾರಂಭಿಸಿದನು. ಅಹೋರಾತ್ರ ದುಡಿದು, ಭಕ್ತಿ-ಶ್ರದ್ಧೆಗಳಿಂದ ಅವನ ಇಷ್ಟ-ದೈವವಾಗಿದ್ದ ವಿಷ್ಣುವಿನ ಚತುರ್ಭುಜ ಮೂರ್ತಿಯೊಂದನ್ನು ನಿರ್ಮಿಸಲಾರಂಭಿಸಿದ. ಅದೇ ಊರಿನ ಮಾದಾಚಾರಿಯೂ ಪ್ರತಿಭಾ-ಸ್ಪರ್ಧೆಯಲ್ಲಿ ಪಾಲ್ಗೊಳ್ಳಲು ಉದ್ಯುಕ್ತನಾದ. ಕೆಲವು ತಿಂಗಳನಂತರ ಇಬ್ಬರೂ ತಮ್ಮ ಮೂರ್ತಿಗಳನ್ನು ರಾಜಧಾನಿಯಲ್ಲಿ ಪ್ರಸ್ತುತಪಡಿಸಿದರು. ಉಳಿದ ಅನೇಕ ಪ್ರತಿಸ್ಪರ್ಧಿಗಳಿದ್ದರೂ ಇವರಿಬ್ಬರ ಶಿಲ್ಪಸೌಂದರ್ಯ ಎದ್ದುಕಾಣುವಂತಿದ್ದುದರಿಂದ ರಾಜರ ಹಾಗೂ ಕುಲಗುರುಗಳ ಮನಸ್ಸನ್ನು ಸೆಳೆದವು. ಕುಲಗುರುಗಳ ಜೊತೆ ಸಮಾಲೋಚಿಸಿ ರಾಜನು ಇವರಿಬ್ಬರ ಶಿಲ್ಪಗಳನ್ನು ರಾಜಧಾನಿಯ ಪ್ರಧಾನ ಚೌಕದಲ್ಲಿ ಪ್ರದರ್ಶಿಸುವಂತೆ ಆಜ್ಞಾಪಿಸಿದರು. ಸಮಸ್ತ ಪೌರರ ಹಾಗೂ ಗುರುಹಿರಿಯರ ಅಭಿಪ್ರಾಯಗಳನ್ನೂ ತೆಗೆದುಕೊಂಡು ಸ್ಪರ್ಧಾ ಫಲಿತಾಂಶವನ್ನು  ಘೋಷಿಸುತ್ತೇವೆಂದರು.  ಮರುದಿವಸ ರಾಮಪ್ಪ, ಮಾದಪ್ಪ ಹಾಗೂ ಇತರ ಶಿಲ್ಪಿಗಳು ಯಾರ ಶಿಲ್ಪವು ಆಯ್ಕೆಯಾಗಿದೆಯೆಂದು ನೋಡುವ ಕುತೂಹಲ - ಉತ್ಸಾಹದಿಂದ ರಾಜಬೀದಿಗೆ ಹೋದರು. ಅಲ್ಲಿ ವಿಜೃಂಭಣೆಯಿಂದ ಅವರಿಬ್ಬರ ಶಿಲ್ಪಗಳು ಎತ್ತರವಾದ ಸ್ಥಾನಪಡೆದಿದ್ದವು. ಇಬ್ಬರ ಸಂತೋಷಕ್ಕೆ ಎಲ್ಲೆಯಿಲ್ಲದಂತಾಯಿತು. ಆದರೆ ಹತ್ತಿರ ನೋಡಿದಾಗ ಅವರ ಎದೆ ಕುಸಿಯುವ ದೃಶ್ಯ! ಅವರ ಅದ್ಭುತ ಶಿಲ್ಪಕಲಾಕೃತಿಗಳ ಕೆಳಗೆ ಆಸ್ಥಾನ ಸ್ಥಪತಿಗಳ ಹೆಸರನ್ನು ನಮೂದಿಸಲಾಗಿತ್ತು. ಅಲ್ಲಿಗೆ ಬಂದ ಆಸ್ಥಾನಸ್ಥಪತಿಗಳು ಕೃತಕವಾದ ವಿನಯದೊಂದಿಗೆ ಜನರ ಹೊಗಳಿಕೆಗಳನ್ನೂ ಅಭಿನಂದನೆಗಳನ್ನೂ ಸ್ವೀಕರಿಸುತ್ತಾ ಮೆರೆಯುತ್ತಿದ್ದರು. ಇದು ಆಸ್ಥಾನ ಸ್ಥಪತಿಗಳ ಪಿತೂರಿಯೆಂದು ತಿಳಿದರು. ರಾಮಪ್ಪನು ಆಶ್ಚರ್ಯಗೊಂಡರೂ ನಿಸ್ಪೃಹನಾಗಿ ಭಕ್ತಿಯಿಂದ ಕಣ್ಣೀರು ಸುರಿಸುತ್ತಾ ಪಕ್ಕದಲ್ಲಿದ್ದ ತುಳಸೀ ದಳವೊಂದನ್ನು ತನ್ನ ವಿಷ್ಣುಮೂರ್ತಿಯ ಪಾದಕ್ಕೆ ಅರ್ಪಿಸಿ ಬೀಳ್ಕೊಟ್ಟು, ನಡೆದು ಬಿಟ್ಟನು. ಇಬ್ಬರೂ ತಂಗುದಾಣದಲ್ಲಿ ರಾತ್ರಿ ಕಳೆದು ಮರುದಿವಸವೇ ಹಳ್ಳಿಗೆ ಹಿಂದಿರುಗುವ ನಿಶ್ಚಯ ಮಾಡಿದರು, ಆದರೆ ಮಾದಪ್ಪನ ಮನಸ್ಸಲ್ಲಿ ಕೋಪದ ಬಿರುಗಾಳಿ ಬೀಸುತ್ತಿತ್ತು. ಕಪಟಿಗಳಾದ ಆಸ್ಥಾನ ಸ್ಥಪತಿಗಳಿಗೆ ಪಾಠ ಕಲಿಸಿಕೊಡಬೇಕೆಂದು ತೀರ್ಮಾನಿಸಿದ. ರಾತ್ರಿಯ ಕತ್ತಲಲ್ಲಿ ರಾಜಮಾರ್ಗದಲ್ಲಿಟ್ಟಿರುವ ಶಿಲ್ಪಗಳನ್ನು ಸಮೀಪಿಸಿದ. ಎರಡು ಉಳಿಪೆಟ್ಟನ್ನು ಹಾಕಿ, ಮೂರ್ತಿಗಳ ಉದ್ದವಾದ ಮೂಗನ್ನು ವಿಕಾರಗೊಳಿಸಿ ಯಾರಿಗೂ ತಿಳಿಯದಂತೆ ಹಿಂತಿರುಗಿದ. ಬೆಳಗಾಗುತ್ತಲೇ ರಾಮಪ್ಪನು ಸ್ವಗ್ರಾಮಕ್ಕೆ ತೆರಳಿದ. ಆದರೆ ಮಾದಪ್ಪ ಶಿಲ್ಪಪ್ರದರ್ಶಿನಿಯ ಹತ್ತಿರಹೋಗಿ ಜನಗಳ ಗುಂಪಿನಲ್ಲಿ ಕಲೆತು ನಿಂತ. ಮಹಾರಾಜರು ಸ್ಪರ್ಧೆಯ ತೀರ್ಪನ್ನು ಹೇಳಲು ಆಗಮಿಸಿದರು. ರಾಜರ ತೀರ್ಪು ಎಲ್ಲರಿಗೂ ಅಚ್ಚರಿಯನ್ನುಂಟುಮಾಡಿತು. ರಾಜನ ಭಟರು ರಾಮಪ್ಪನನ್ನುಪಲ್ಲಕ್ಕಿಯಲ್ಲಿ ಕುಳ್ಳಿರಿಸಿ ಕರೆತಂದು ಸನ್ಮಾನಿಸಿ ಆಲಯ ನಿರ್ಮಾಣಕ್ಕೆ ಪ್ರಧಾನ ಸ್ಥಪತಿಯನ್ನಾಗಿ ನೇಮಿಸಿ, ಆಸ್ಥಾನ ಸ್ಥಪತಿಗಳನ್ನು ಕಾರ್ಯನಿವೃತ್ತರನ್ನಾಗಿಸಿದರು. ಮಾದಪ್ಪನಿಗೆ ಎಚ್ಚರಿಕೆ ನೀಡಿ ಕಳುಹಿಸಲಾಯಿತು. ಆಶ್ಚರ್ಯವೆಂದರೆ, ಶಿಲ್ಪಗಳ ಕೆಳಗೆ ಆಸ್ಥಾನಸ್ಥಪತಿಗಳ ಹೆಸರನ್ನು ಹಾಕಿಸಿದ್ದೂ ರಾಜನೇ ಎಂದು ತಿಳಿಯಿತು. ರಾಜಗುರುಗಳೊಂದಿಗೆ ಆಲೋಚಿಸಿ ಕಲ್ಪಿಸಿದ ಪ್ರಾಮಾಣಿಕತೆ ಮತ್ತು ಭಕ್ತಿಯ ಪರೀಕ್ಷೆಯಾಗಿತ್ತದು. ಈ ಪರೀಕ್ಷೆಯಲ್ಲಿ ಉತ್ತೀರ್ಣನಾದ ರಾಮಪ್ಪನೋ, ತನ್ನ ಇಷ್ಟದೈವದ ಪಾದದಲ್ಲಿ ಕುಳಿತು ಆನಂದಭಾಷ್ಪವನ್ನು ಹರಿಸುತ್ತಿದ್ದ !


ಶಿಲ್ಪಕಲೆಯು ಭಾರತದ ಪರಮಾದ್ಭುತ ಕಲೆಗಳಲ್ಲಿ ಒಂದು. ಕೆತ್ತನೆಯಲ್ಲಿ ಕೌಶಲ್ಯ ಅನೇಕ ದೇಶಗಳಲ್ಲಿ ಕಂಡುಬರುವುದೇ ಆದರೂ ಭಾರತದಲ್ಲಿ ಈ ಶಾಸ್ತ್ರವು ಬೆಳೆದುಬಂದ ಹಿನ್ನೆಲೆ, ಉದ್ದೇಶ್ಯ ಮತ್ತು ಮನೋಧರ್ಮಗಳು ತುಂಬಾ ವಿಶಿಷ್ಟವಾಗಿವೆ. ಶಿಲ್ಪಿಯನ್ನು ಸೃಷ್ಟಿಕರ್ತನಾದ ಬ್ರಹ್ಮನಿಗೆ ಹೋಲಿಸಿದ್ದಾರೆ. ದೇವಶಿಲ್ಪಿಯ ಹೆಸರೇ 'ವಿಶ್ವಕರ್ಮ'. ಶಿಲ್ಪಿಯು ಬ್ರಹ್ಮನಂತೆ ಕಲ್ಲಿನಲ್ಲೋ ಮರದಲ್ಲೋ ತನ್ನದೇ ಆದ ಒಂದು ಪ್ರಪಂಚವನ್ನು ನಿರ್ಮಿಸಬಲ್ಲ. ಆದರೆ ಅವನು ಕಲ್ಪಿಸುವ ಪ್ರಪಂಚ ಯಾವುದು? ಇಲ್ಲಿ 'ಶಿಲ್ಪ' ಎಂಬ ಪದವೇ 'ಸಮಾಧಿ' ಎಂಬರ್ಥವನ್ನು  ಸಾರುತ್ತಿದೆ. ಋಷಿಗಳು, ಜ್ಞಾನಿಗಳು ತಮ್ಮೊಳಗೆ ಕಂಡ ದೇವತಾ ರೂಪಗಳನ್ನು ಅಂತೆಯೇ ಶಿಲ್ಪಕ್ಕೆ ಇಳಿಯುವಂತೆ ಮಾಡಿದರೆ, ಆ ಶಿಲ್ಪಿಯು ಜ್ಞಾನಿಗಳ ಸಮಾಧಿಸಾಮ್ರಾಜ್ಯವನ್ನೂ, ದೈವೀ ಲೋಕದ ಸಮಾಚಾರವನ್ನೂ ಈ ಲೋಕದಲ್ಲಿ ನಿರ್ಮಿಸಿದ ವಿಶ್ವಕರ್ಮನಾಗುತ್ತಾನೆ. ಶಿಲ್ಪಿಯ ಈ ಸೃಷ್ಟಿಕಾರ್ಯ ನಡೆಯಬೇಕಾದರೆ ವಿಧಿ - ವಿಧಾನಗಳ ಒಂದು ಚೌಕಟ್ಟು ಬೇಕು. ಬ್ರಹ್ಮನಿಗೂ ವಿಧಿ ವಿಧಾನಗಳು ತಪ್ಪಿದ್ದಲ್ಲ. ಜಗನ್ಮಾತಾ ಪಿತೃಗಳಾದ ಲಕ್ಷ್ಮೀ-ನಾರಾಯಣರ ಸಂಕಲ್ಪದಂತೆ ಕಾರ್ಯವನ್ನು ನಡೆಸಬೇಕು. 


ಈ ವಿಧಿ - ವಿಧಾನಗಳು ಯಾರೊಬ್ಬರ ಇಷ್ಟ-ಅನಿಷ್ಟಗಳ ಪಟ್ಟಿಯಲ್ಲ. ಇವು ಸೃಷ್ಟಿಸಹಜವಾಗಿಯೇ ಇರುತ್ತವೆ. ಒಂದು ವೃಕ್ಷದ ಸೃಷ್ಟಿಯಾಗಬೇಕಾದರೆ, ಬೀಜ, ಅಂಕುರ, ಕಾಂಡ, ಶಾಖೆ, ಹೂವು, ಕಾಯಿ ಹಣ್ಣು ಮುಂತಾದ ಹಂತಗಳನ್ನು ತಾಳಿ ಹಣ್ಣಿನೊಳಗೆ ಪ್ರಾರಂಭದ ಬೀಜವೇ ಪುನಃ ಕಾಣಿಸಿಕೊಳ್ಳುತ್ತೆ. 

ಅಂತೆಯೇ ಶಿಲ್ಪದ ಬೀಜವು ಜ್ಞಾನಿಗಳ ಧ್ಯಾನ ಸಾಮ್ರಾಜ್ಯದಲ್ಲಿರುವುದು. ಅದು ಅಂಕುರ ಒಡೆಯುವುದು ಶಿಲ್ಪಿಯ ಅಮೃತಹಸ್ತದಿಂದ. ಒಳ ದರ್ಶನದ ದೇವತಾ ಮೂರ್ತಿಗಳ ಲಕ್ಷಣಗಳು, ಮುಖಭಾವಗಳು ಅಂತೆಯೇ ಕಲ್ಲಿನಲ್ಲಿ ಮುದ್ರಿತವಾಗ ಬೇಕು. ಹಾಗಾದರೆ ಅಂಕುರವು ವೃಕ್ಷವಾಗಿ ಬೆಳೆದು ಒಳ ಅನುಭವದ ಪ್ರತಿಕೃತಿಯಾಗಿ  ದೇವತಾಮೂರ್ತಿಯ  ರೂಪತಾಳುತ್ತದೆ. ದೇವತಾ ವಿಗ್ರಹದ ಅಳತೆಗಳು, ಅವುಗಳ ನಿಲುವು, ಭಂಗಿ, ಆಳವಾದ ದೃಷ್ಟಿ, ಕೈಯಲ್ಲಿನ ಆಯುಧಗಳು ಎಲ್ಲವೂ ದರ್ಶನಾರ್ಥಿಗಳ ಮನಸ್ಸನ್ನು ಒಳಸೆಳೆಯುವ ಸಾಧನಗಳಾಗಿವೆ . ದೀಪಜ್ಯೋತಿಯಲ್ಲಿ ಅದರ ದರ್ಶನ ಶಂಖ, ಘಂಟೆ ಮುಂತಾದುವುಗಳ ಶ್ರವಣ, ತುಳಸಿ ಮತ್ತು ಸುಗಂಧಿತ ಪುಷ್ಪಗಳ ಕಂಪು, ಹೃದಯದಲ್ಲಿ ಇಂಪು-ತಂಪುಗಳನ್ನು ಮೂಡಿಸುತ್ತವೆ. ಜ್ಞಾನಿಗಳ ಹೃದಯದಲ್ಲಿಂದ ಹೊರಟ ಒಂದು ಅನುಭವದ ಬೀಜದಿಂದ ಬೆಳೆದ ವೃಕ್ಷದ ಫಲವೆಂದರೆ ಭಕ್ತರ ಹೃದಯದಲ್ಲಿನ ಈ ತಂಪು. ಅಲ್ಲಿಗೆ ಒಂದು ವೃತ್ತವು ಪೂರ್ಣಗೊಂಡಂತೆ.  


ಈ ವೃತ್ತವು ಪೂರ್ಣಗೊಳ್ಳಬೇಕಾದರೆ,  ಶಿಲ್ಪಕ್ಕೆ ತಕ್ಕ ಮನೋಧರ್ಮಗಳು ಬೇಕು. ಮೇಲಿನ ಕಥೆಯಲ್ಲಿ ರಾಜಗುರುವಿನ ನೇತೃತ್ವದಲ್ಲಿ ರಾಜರು ಪರಮಾನಂದಾನುಭವದ ಬೀಜದ ವ್ಯವಸಾಯವನ್ನೇ ಮಾಡುತ್ತಿದ್ದರು. ದೇವತಾ ಮೂರ್ತಿಗಳು ಒಳ್ಳೆಯ ಪ್ರತಿಕೃತಿಗಳಾಗ ಬೇಕಾದರೆ ಕಲಾ ಪ್ರಾವೀಣ್ಯವಂತೂ ಅತ್ಯಾವಶ್ಯಕ. ಆದರೆ ಬೆಳೆಯನ್ನು ಬೆಳೆಯುವವನು ಕಳೆಯನ್ನೂ ಬೆಳೆದರೆ ಅದು ಮಾರಕವಾಗುತ್ತದೆ. ಕಾಮ-ಕ್ರೋಧ-ಅಸೂಯೆಗಳು, ಕೀರ್ತಿಕಾಮನೆಗಳು ಕಲೆಯ ಬೆಳವಣಿಗೆಯಲ್ಲಿ ತೊಡಕಾದ ಕಳೆಗಳು. ಆಸ್ಥಾನ ಸ್ಥಪತಿಗಳಿಗೆ ಮೂರ್ತಿಗಳ ಕೆಳಗೆ ತಮ್ಮ ಹೆಸರನ್ನು ನಮೂದಿಸಿದ್ದನ್ನು ನೋಡಿ ಆಶ್ಚರ್ಯವಾದರೂ ನಿಸ್ಸಂಕೋಚವಾಗಿ ಚಪ್ಪಾಳೆಗಳನ್ನು ಸ್ವೀಕರಿಸಿ ಮೆರೆದರು. ಇದು ಚೌರ್ಯವೇ ಸರಿ. ಇಂತಹ ಪ್ರವೃತ್ತಿಗಳು ಋಷಿಭಾವಕ್ಕೆ ವಿರುದ್ಧವಾದವುಗಳು. ಮಾದಪ್ಪನೋ ಕ್ರೋಧವಶನಾಗಿ ತನ್ನದೇ ಆದ ಸೃಷ್ಟಿಯನ್ನು ನಾಶಮಾಡಲು ಸಿದ್ಧನಾದ. ಮಾದಪ್ಪನು ಕೆತ್ತಿದ ಮೂರ್ತಿಯು ಜ್ಞಾನಿಗಳ ಹೃದಯದ ಶಿಲ್ಪವಲ್ಲ, ತನ್ನ ಕೀರ್ತಿಕಾಮನೆಯ ಸಾಧನವಾಗಿತ್ತು. ಆದ್ದರಿಂದಲೇ, ಕೀರ್ತಿಯು ತನ್ನ ಪಾಲಿಗೆ ಅಸಾಧ್ಯವೆಂದು ತಿಳಿದಾಗ ಆ ಮೂರ್ತಿಯು ಅವನಿಗೆ ಬರೀ ಕಗ್ಗಲ್ಲಿನಂತೆ ಕಂಡಿತು. ಆದರೆ ರಾಮಪ್ಪನಿಗೆ ಆ ಮೂರ್ತಿಯು ಪವಿತ್ರವಾದ ದೇವತೆಯ ಸಾಕ್ಷಾತ್  ಆವಿರ್ಭಾವವೇ ಆಗಿತ್ತು. ಅವನಿಗಾದ ಅನ್ಯಾಯದಿಂದ ಮೂರ್ತಿಯ ದೈವತ್ವ ಅವನ ಕಣ್ಣಿಂದ ಮರೆಯಾಗಲಿಲ್ಲ. ಅದನ್ನು ಕಲ್ಲಿನಂತೆ ಎಂದೂ ಭಾವಿಸಲಿಲ್ಲ. ಪೂರ್ವಜರಿಂದ ಕಲಿತ ಕಲೆಯ ಪ್ರಯೋಗದಿಂದ ಸೃಷ್ಟವಾದ ತನ್ನ ಇಷ್ಟದೈವವೆಂದೇ ಭಾವಿಸಿದ. ತುಳಸಿಯ ಒಂದು ದಳವನ್ನು ಸಮರ್ಪಿಸಿ  ತನ್ನ ಇಷ್ಟದೈವಕ್ಕೂ, ಪೂರ್ವಜರಿಗೂ, ವಿಶ್ವಕರ್ಮನಿಗೂ, ಬ್ರಹ್ಮನಿಗೂ ಸಲ್ಲಬೇಕಾದ ಕಾಣಿಕೆಯನ್ನು ಸಲ್ಲಿಸಿಬಿಟ್ಟ. ಶಾಂತಿ-ನೆಮ್ಮದಿಗಳ ಆಗರವಾಗಿರಬೇಕಾದ ಮೂರ್ತಿಯನ್ನು ಕೆತ್ತಲು ಪ್ರೀತಿ-ಭಕ್ತಿ-ಸಂಯಮದಿಂದಲೇ  ಸಾಧ್ಯ. ದೇವತಾ ವಿಗ್ರಹಗಳನ್ನು ಕಾಣಬೇಕಾದ ರೀತಿಯನ್ನು ಕುರಿತು ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳ ಅಭಿಪ್ರಾಯಹೀಗಿತ್ತು - ಜ್ಞಾನಿಗಳು ಆತ್ಮಯೋಗದಲ್ಲಿ ಕಂಡ ಸತ್ಯವನ್ನು ಶಿಲಾಯೋಗದಲ್ಲಿ ಸೇರಿಸಿದ್ದಾರೆ. ಮಕ್ಕಳು ಬೊಂಬೆಗಳನ್ನು ಇಟ್ಟುಕೊಂಡು ಆಡುವಾಗ, ಅವುಗಳ ಬೊಂಬೆತನವನ್ನು ಮರೆತು 'ಇದು ತಾಯಿ, ಇದು ಮಗು' ಎಂದೇ ವ್ಯವಹರಿಸುತ್ತವೆ. ದೇವತಾ ಮೂರ್ತಿಗಳು, ಜ್ಞಾನಿಗಳು ನಮ್ಮ ಪಾಲಿಗೆ ಕೊಟ್ಟು ಹೋದ ಬೊಂಬೆಗಳಂತೆ. ಇವುಗಳನ್ನು ಇಟ್ಟುಕೊಂಡು ಆಡುವಾಗಲೆಲ್ಲಾ ಅದರ ಹಿಂದಿನ ಅಮರ ಭಾವವು ನಮ್ಮ ಹೃನ್ಮನಗಳಲ್ಲಿ ಆಡಬೇಕು.


ಸೂಚನೆ: 8/07/2021 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಶ್ವ ವಾಣಿ ಯಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.