Showing posts with label 218_ayvmarticle. Show all posts
Showing posts with label 218_ayvmarticle. Show all posts

Thursday, April 9, 2020

நரஸிம்ஹ அவதாரம் கூறும் தத்துவம் (Narasimha Avataram Kurum Tattuvam)

மூலம்: சுப்ரஹ்மண்ய ஸோமயாஜி
தமிழாக்கம்: வனஜா
மின்னஞ்சல் : (lekhana@ayvm.in)  


ஹிரண்யகசிபுவின் அரசவை. தன் சொந்த மகனான ப்ரஹ்லாதனே தனக்கு விரோதி (என்பது அவனது எண்ணம்). விஷ்ணுவின் பெயரை உச்சரிப்பதை நிறுத்த மாட்டான். தாங்க முடியாத கடுங்கோபத்துடன் ஹிரண்யகசிபு வினவுகிறான் "எங்கிருக்கிறான் உன் நாராயணன்?" “எவ்விடத்தும் நிறைந்திருக்கிறான் தந்தையே" மகன் தனக்கே உரிய இயற்கையான பதிலளித்தான். "மிகுந்த கோபத்துடன் "இந்த தூணில்?" என்று வினவ சிறிதும் சலனமின்றி  "அங்கும் உள்ளான்" என்று சிறுவனின் பதில். மட்டற்ற கோபத்துடன் தூணை உதைத்த போது பேரொளியுடன் ஸ்ரீநரசிம்ஹ தேவனின் அவதாரம். ஹிரண்யகசிபுவின் இதயத்தை சீண்டு அவனை வதம் செய்கிறான்.  இப்புராணக்கதை நாமனைவரும் அறிந்ததே.

இக்கதையின் ஆழ்ந்த உட்கருத்தைக் குறித்து ஸ்ரீரங்கமஹாகுரு இவ்வாறு கூறியிருந்தார். ’தூண்’ என்பது நம்முடைய முதுகெலும்பை குறிக்கிறது. அதை அரக்க சக்திகள் கைப்பற்றும்போது அது ஹிரண்யகசிபுவின் அரசவைதூணாகிறது. ப்ரஹ்லாதரூபியான பரிஶுத்தனின் பக்தியின்  விளைவால் இறைவன் ஸ்ரீநரஸிம்ஹன் ஒளி மயமாக ஓங்காரத்தை கர்ஜித்த வண்ணம் அத்தூணை பிளந்து கொண்டு தைத்தியர்களுக்கு அதிபயங்கரமான உருவத்துடன் தோன்றினான். உள்ளத்தின் உள்ளும் வெளியுமற்ற இடைபட்ட வாசற்படியில் அமர்ந்து காலையும், மாலையும் (படைப்பு-அழிப்புகள்) இணையும் சந்த்யா காலத்தில் மெய்யறிவற்ற மூர்க்கனான அரக்கனின் இதயத்தை பிளந்து அவன் அறியணையில் ஏறி அமர்கின்றான். உண்மையில் அது பகவத்தியான சிம்ஹாசனமே. அரக்கர்களின் பிடியிலிருந்து அதனை விடுவித்து  தான் அமர்ந்து  தூய்மைபடுத்தி தேவர்களின் அரசு மீண்டும் உருவாகும்படி அருள்கிறான்.

விஷ்ணு என்றால் நிறைந்திருப்பவன், எல்லாவிடத்தும் நீக்கமற  நிறைந்துள்ள இறைவன். ’எங்கெங்கும் உள்ளான்’ என்ற அடியவனான (பக்தனான) ப்ரஹ்லாதனின் கூற்று அவனின் நிறைந்திருக்கும் தன்மையை உணர்த்தும் உண்மையான கூற்றாயிற்று. ஆயின் இவ்வுண்மையை உணராமல் தூணைப்போல் இருந்தது ஹிரண்யகசிபுவின் இதயம். அதனை  பிளக்கவே வேண்டியதாயிற்று. வெளித்தோற்றத்திற்கு இது கொடுமையானதாக காணலாம். நமக்கு மிகவும் கசப்பான மருந்து நமக்குள்ளிருக்கும்  வியாதியை நீக்கி நம்மை  நோயற்றவராக்கும் இனிமையை தன்னகத்தே கொண்டதல்லவா? .அவ்வாறே நம் வியாதிக்கு தக்க மருந்தை அளித்து நம்மை நலமடைய செய்தலும் இறைவனின் கருணையே.

நம் உள்ளத்தில் அரக்க குணம் நிறைந்துள்ளது. எனவே நம் இதயமும் ஹிரண்யகசிபுவை போல், அவன் அரசவை தூணைப்போல் இறுகி கடினமாயுள்ளது. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை அறிய முடியாத, உணரமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நமக்கு மகிழ்ச்சியின், நிம்மதியின் அனுபவத்தை உணர்த்தவே இரக்கமுள்ள பரம்பொருள் துறவிகள், முனிவர்கள், சான்றோர் ஆகியோரின் மூலம் நம் அறிவை தெளிவிக்க முயற்சிக்கிறான். உணர்ச்சியற்றிருக்கும் நம் இதயத்தை உண்மையுணரும்படி (கரைய)செய்யும்  செயல்  இந்நாட்டில் இடையறாது  நடைபெற்று வந்துள்ளது. பாரதநாட்டின் முனிவர்கள் அருளிய வாழ்க்கை முறை  நமக்கு  இந்த உன்னதமான அனுபவத்தின் அமுததாரையை ஊட்டவே ஏற்பட்டது என்பதை நாம் மறவாதிருப்போமாக.

குறிப்பு: இக்கட்டுரை யின் கன்னட மூலம் AYVM blogs ல் காணலாம்.

Tuesday, December 10, 2019

ಶ್ರೀ ನರಸಿಂಹಾವತಾರದ ಪಾಠ (Shree narasimhavatarada paata)

ಲೇಖಕರು: ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ ಸೋಮಯಾಜಿ


ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ರಾಜಾಂಗಣ. ತನ್ನ ಸ್ವಂತ ಮಗನಾದ ಪ್ರಹ್ಲಾದ ಕುಮಾರನೇ ತನ್ನ ಶತ್ರು (ಎಂದು ಅವನು ಭಾವಿಸಿದ!).  ವಿಷ್ಣುದೇವನ ಸಂಕೀರ್ತನೆಯನ್ನು ಬಿಡಲೊಲ್ಲನು. ಸಹಿಸಲಾರದ ಕೋಪದಿಂದ ಹಿರಣ್ಯಕಶಿಪು ಕೇಳುತ್ತಾನೆ- ಎಲ್ಲಿದ್ದಾನೆ ನಿನ್ನ ನಾರಾಯಣ? “ ಎಲ್ಲೆಲ್ಲಿಯೂ ಇದ್ದಾನೆ ತಂದೆಯೇ?” ಮಗನ ಸಹಜವಾದ ಉತ್ತರ. ಅತಿಯಾದ ಕೋಪದಿಂದ ಈ ಕಂಬದಲ್ಲಿ? ಎಂದು ಕೇಳಿದಾಗ ಸ್ವಲ್ಪವೂ ವಿಚಲಿತನಾಗದೇ “ ಅಲ್ಲೂ ಇದ್ದಾನೆ” ಎಂದು ಬಾಲಕನ ಉತ್ತರ. ಕೋಪಾವೇಶದಿಂದ ಕಂಬವನ್ನು ಒಡೆದಾಗ ಮಹಾ ಪ್ರಕಾಶದಿಂದ ಶ್ರೀ ನರಸಿಂಹ ದೇವರ ಅವತಾರ.. ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಹೃದಯವನ್ನು ಸೀಳಿ ಅವನ ವಧೆ ಮಾಡುತ್ತಾನೆ. ಈ ಪುರಾಣದ ಕಥೆ  ನಮಗೆಲ್ಲ ಗೊತ್ತಿರುವುದೇ.

ಈ ಕಥೆಯ ಒಂದು ಒಳಮರ್ಮವನ್ನು ಶ್ರೀರಂಗ ಮಹಾಗುರುಗಳು ಹೇಳುತ್ತಿದ್ದರು-“ಮೇರುಸ್ತಂಭ” ಎಂದರೆ ಬೆನ್ನುಮೂಳೆ. ಅಂತರಂಗವನ್ನು ಆಸುರೀ ಶಕ್ತಿಗಳು ಆಕ್ರಮಣ ಮಾಡಿದಾಗ ಅದು ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಸಭಾಸ್ತಂಭವಾಗುತ್ತದೆ. ಪ್ರಹ್ಲಾದರೂಪಿಯಾದ ಪರಿಶುದ್ಧಾತ್ಮನ ಪರಾ ಭಕ್ತಿಯ ಪ್ರಭಾವದಿಂದ ಪರಮಾತ್ಮ ಶ್ರೀ ನರಸಿಂಹನು ಪ್ರಕಾಶಮಯವಾಗಿ ಪ್ರಣವ ಗರ್ಜನೆಯನ್ನು ಮಾಡುತ್ತಾ ಆ ಸ್ತಂಭವನ್ನು ಭೇದಿಸಿಕೊಂಡು ದೈತ್ಯಭೀಕರ ರೂಪದಿಂದ ಆವಿರ್ಭವಿಸುತ್ತಾನೆ. ಅಂತರಂಗದ ಮನೆಯ ಒಳಹೊರಗಿನ ಮಧ್ಯಸ್ಥಾನವಾದ ಹೊಸ್ತಿಲಿನಲ್ಲಿ ಕುಳಿತು ಲಯ-ವಿಕ್ಷೇಪಗಳ ಸಂಧಿಕಾಲವಾದ ಸಂಧ್ಯಾಸಮಯದಲ್ಲಿ ಅವಿದ್ಯಾರೂಪಿಯಾದ ಅಸುರರಾಜನ ಎದೆಯನ್ನು ಸೀಳಿ ಅವನ ಸಿಂಹಾಸನವನ್ನು ಏರಿ ಕುಳಿತುಕೊಳ್ಳುತ್ತಾನೆ. ವಾಸ್ತವವಾಗಿ ಅದು ಭಗವಧ್ಯಾನ ಸಿಂಹಾಸನವೇ. ಅಸುರರ ಆಕ್ರಮಣದಿಂದ ಅದನ್ನು ಮುಕ್ತಗೊಳಿಸಿ ಅದರಲ್ಲಿ ತಾನು ಕುಳಿತು ಅದನ್ನು ಪವಿತ್ರಗೊಳಿಸಿ ದೇವರಾಜ್ಯವು ಮತ್ತೆ ಪ್ರತಿಷ್ಠಿತವಾಗುವಂತೆ ಮಾಡುತ್ತಾನೆ.

ವಿಷ್ಣು-ಎಂದರೆ ವ್ಯಾಪಿಸಿರುವವನು. ಸರ್ವವ್ಯಾಪಿಯಾದ ಭಗವಂತ. ಎಲ್ಲೆಲ್ಲಿಯೂಇದ್ದಾನೆ ಎಂಬ ಭಕ್ತ ಪ್ರಹ್ಲಾದನ ಮಾತು ಅವನ ವ್ಯಾಪ್ತಿಯನ್ನು ತಿಳಿಸುವ ಸತ್ಯಾರ್ಥದ ಮಾತಾಗಿತ್ತು. ಆದರೆ ಈ ಸತ್ಯಾರ್ಥವನ್ನು ಗ್ರಹಿಸದೇ ಕಂಬದಂತಾಗಿದೆ, ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಹೃದಯ. ಅದನ್ನು ಸೀಳಲೇ ಬೇಕಾಯಿತು. ಹೊರಬುದ್ಧಿಗೆ ಇದು ಕ್ರೌರ್ಯದಂತೆ ಕಾಣಬಹುದು. ನಮಗೆ ಅತ್ಯಂತ ಕಹಿ ಎನ್ನಿಸುವ ಔಷಧವು ನಮ್ಮೊಳಗಿನ ರೋಗವನ್ನು ಪರಿಹರಿಸಿ ನಮ್ಮನ್ನು ಆರೋಗ್ಯವಂತರನ್ನಾಗಿಸುವ ಮಾಧುರ್ಯಾಂಶವನ್ನು ಹೊಂದಿರುವುದಿಲ್ಲವೇ? ಹಾಗೆಯೇ ನಮ್ಮ ರೋಗದ ಸ್ವರೂಪಕ್ಕೆ ತಕ್ಕ ಔಷಧವನ್ನು ಅವನು ಕೊಟ್ಟು ನಮ್ಮನ್ನು ಸಹಜಸ್ಥಿತಿಗೆ ತರಿಸುವುದು ಭಗವಂತನ ಕರುಣೆಯೇ ಆಗಿದೆ.

ಒಂದು ದೃಷ್ಟಿಯಿಂದ ನಮ್ಮಅಂತರಂಗವೂ ಅಸುರಾಕ್ರಾಂತವಾಗಿದೆ. ಎಂದೇ ನಮ್ಮ ಹೃದಯಗಳೂ ಹಿರಣ್ಯಕಶಿಪುವಿನ ಹೃದಯದಂತೆ, ಅವನ ಸಭಾಸ್ತಂಭದಂತೆಯೇ ಸ್ತಂಭೀಭೂತವಾಗಿವೆ. ಎಲ್ಲೆಲ್ಲಿಯೂ ಇರುವ ಆ ಮಹಾಚೇತನನನ್ನು ಅರಿಯಲಾಗದ, ಅನುಭವಿಸಲಾಗದ ಸ್ಥಿತಿಯಲ್ಲಿ ನಾವಿದ್ದೇವೆ. ನಮಗೆ ಆ ಆನಂದದ, ನೆಮ್ಮದಿಯ ಅನುಭವ ಆಗಬೇಕೆಂದೇ ಕರುಣಾಮಯನಾದ ದೇವನು ಜ್ಞಾನಿಗಳ, ಮಹರ್ಷಿಗಳ, ಸಜ್ಜನರ ಮುಖೇಣ ನಮ್ಮ ಅರಿವನ್ನು ತಿಳಿಗೊಳಿಸಲು ಪ್ರಯತ್ನಿಸುತ್ತಿದ್ದಾನೆ. ಜಡವಾದ ನಮ್ಮ ಹೃದಯಗಳನ್ನು ಸತ್ಯಾರ್ಥದಿಂದ ಆರ್ದ್ರಗೊಳಿಸುವ ಕೆಲಸ ಈ ದೇಶದಲ್ಲಿ ಅವಿರತವಾಗಿ ನಡೆದಿದೆ. ಭಾರತೀಯ ಸಂಸ್ಕೃತಿಯ ಮಹರ್ಷಿಪ್ರಣೀತವಾದ ಎಲ್ಲ ಜೀವನ ವಿಧಾನಗಳೂ ನಮಗೆ ಈ ನೈಜವಾದ ಅನುಭವದ ಅಮೃತಧಾರೆಯನ್ನು ಉಣಿಸಲೆಂದೇ ಬಂದಿವೆ ಎಂಬುದನ್ನು ಮರೆಯದಿರೋಣ.


ಸೂಚನೆ:  10/12/2019 ರಂದು ಈ ಲೇಖನ ವಿಜಯವಾಣಿ ಮನೋಲ್ಲಾಸ ಅಂಕಣದಲ್ಲಿ ಪ್ರಕಟವಾಗಿದೆ.